தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு – அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு - அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு - அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு – அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் 1 முதல் 8 ம் வகுப்புவரை பள்ளிகள் கட்டாயம் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் தொடக்க பள்ளிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி ஒரு தரப்பினர் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் 6 முதல் 13 வயதே ஆன குழந்தைகள் என்பதால் அவர்களுக்கு எளிதில் நோய்த்தொற்று ஏற்படும். அதனால் பள்ளிகளை திறக்க தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். மற்றொரு தரப்பினர் தற்போது கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வருகிறது உண்மைதான். ஆனால் முற்றிலும் குறையவில்லை, இன்னும் சில நாட்கள் அதாவது தீபாவளி முடிந்த பிறகு பள்ளிகள் திறக்கலாம் என்று கூறுகின்றனர். ஏனெனில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் ஒன்றுகூடி ஜவுளிக்கடை மற்றும் பிற இடங்களுக்கு செல்கிறார்கள். அதனால் மேலும் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதாக காரணம் தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு கல்லூரிகளில் 2,423 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் – அரசு அனுமதி!

மற்றொரு தரப்பினரான தனியார் பள்ளி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்பு மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை என்று தெரிவிக்கின்றனர். இவ்வாறாக பள்ளிகள் திறப்பு சந்தேகத்திற்கு இடமாக இருந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி ரயில்வே ஜங்சன் பகுதியில் உள்ள கதர் கிராம தொழில் வாரிய சிறப்பு விற்பனையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். அப்போது தொடக்கப்பள்ளிகள் திறப்பது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, பள்ளிகள் திறப்பில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துள்ளார். ஏனெனில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் பொது சுகாதார மருத்துவக் குழுவுடனும், முதன்மை கல்வி அலுவலர்களுடனும் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்திய பிறகு தான் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – கருப்பட்டி விற்பனை அரசாணை வெளியீடு!

மேலும் ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு சுழற்சி முறையில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் 98% பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர், எஞ்சிய 2% பேர் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்றும் அவர் தெளிவாக கூறியுள்ளார். மேலும் பாடத்திட்டங்களும் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பள்ளி திறக்கும் முடிவு ஆரம்பக் கல்வி பெற முடியாத நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு கல்வி அறிவை புகட்டும் ஒரு நோக்கத்தோடு மட்டுமே எடுக்கப்பட்டதாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!