TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டம், தேர்வு மாதிரி!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 4, விஏஓ தேர்வு பற்றிய அறிவிப்புகள் விரைவில் வர உள்ள நிலையில், தேர்வுக்கான முக்கிய விவரங்கள் அனைத்தும் இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வுகள்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசின் அனைத்து துறைகளுக்குமான ஊழியர்களை நியமனம் செய்து வருகிறது. பதவிகளின் பணிநிலையை பொறுத்து தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த 2 வருடங்களாக கொரோனா கால பேரிடர் காரணமாக TNPSC தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. அதில், மிகவும் அடிப்படை கல்வியான 10ம் வகுப்பு கல்வித்தகுதியில் அதிக நபர்கள் கலந்து கொள்ளும் குரூப் 4, விஏஓ தேர்வு பற்றிய எதிர்ப்பார்ப்பு நீண்டு வருகின்றது. இந்த தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட இருப்பதாக சமீபத்திய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PF கணக்குதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய ஓய்வூதிய திட்ட ஆலோசனை!
குரூப் 4 தேர்வின் மூலம் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் போன்ற 7 பணியிடங்கள் நிரப்பப்படும். தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
குரூப் 4 தேர்விற்கு பொது பிரிவினராக இருந்தால் 21 முதல் 30 வயது வரையும், மற்ற வகுப்பினருக்கு 40 வயது வரையும் சலுகை உண்டு. இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளுக்கு பொதுபிரிவினருக்கு 18 வயது முதல் 30 வரையும், பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரை சலுகை உண்டு. பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் உண்டு. அதில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப் புத்தகங்களில் இருந்து தான் பாடத்திட்டம் உள்ளது.