TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம், தேர்வு முறை பற்றிய முழு விபரங்கள் இதோ!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு முறை பற்றி தெளிவாக பார்க்கலாம்.
குரூப் 4 தேர்வுக்கான தகவல்கள்
தமிழகத்தில் அரசு அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளின் மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தற்போது இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அரசு பணியிடங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை பெறும் வகையில் தமிழ் மொழித்தாளை தகுதித் தேர்வாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு ரத்து – அரசுக்கு கோரிக்கை!
மேலும் ஆங்கில மொழி பாடப்பிரிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளை வருகிற மார்ச் மாதத்தில் வெளியிட உள்ளதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 4 தேர்வு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த குரூப் 4 தேர்வுக்கு தான் அதிக போட்டியாளர்கள் உள்ளனர். ஏனெனில் இத்தேர்வுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது. அத்துடன் இத்தேர்வு ஒரே ஒரு நிலை கொண்ட எழுத்து தேர்வு ஆகும். அதனால் இத்தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர்.
இத்தேர்வில் 100 வினாக்கள் தமிழ் மொழி பாடப்பிரிவில் இருந்து கேட்கப்படும். இதையடுத்து 40 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பீடு செய்யப்படும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வினை 18 வயது முதல் 30 வரை உள்ளவர்கள் வரை எழுதலாம். ஆனால் குறிப்பிட்ட சில பிரிவினர்களுக்கு வயது வரம்பில் சலுகைகளும் வழங்கப்படுகிறது. அத்துடன் குரூப் 4 தேர்வில் 200 வினாக்கள் கேட்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு வினாக்களுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 2022 ஜனவரி DA 3% அதிகரிப்பு!
அத்துடன் அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் கேட்கப்படும். இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இதில் தகுதியான நபர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட 7 பணியிடங்களில் நிரப்பப்படுவார்கள். இதில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் போன்ற பதவிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை, முதுநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
பாட திட்டம்
குரூப் 4 தேர்வில் தமிழ்மொழி பாடப்பிரிவில் 100 வினாக்களும், பொது அறிவுப் பகுதியில் 75 வினாக்களும் , திறனறி பகுதியில் 25 வினாக்களும் கேட்கப்படுகிறது.
பொது அறிவு பகுதியில் கீழ்க்கண்ட தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது.
அறிவியல்: இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல்
நடப்பு நிகழ்வுகள்: வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல்
புவியியல்: புவி மற்றும் பிரபஞ்சம், சூரியக் குடும்பம், பருவகாற்றுகள், வானிலை, நீர் ஆதாரங்கள், மண், கனிம வளங்கள், காடுகள், வன உயிரினங்கள்
வரலாறு: சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள், டில்லி சுல்தான், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜய நகர மற்றும் பாமினி அரசுகள், தென்னிந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 2022 ஜனவரி DA 3% அதிகரிப்பு!
இந்திய அரசியல்: அரசியலமைப்பு, முகவுரை, அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள், குடியுரிமை, கடமைகள் மற்றும் உரிமைகள், ஒன்றிய மற்றும் மாநில நிர்வாகம், பாராளுமன்றம், பஞ்சாயத்து ராஜ்.
பொருளாதாரம்: ஐந்தாண்டு திட்டங்கள், நிலச்சீர்திருத்தம், வேளாண் மற்றும் வணிக வளர்ச்சி.
இந்திய தேசிய இயக்கம்: தேசிய எழுச்சி, விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு, தாகூர், ராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பல தலைவர்களின் பங்கு.
திறனறி வினாக்கள்: தர்க்க அறிவு மற்றும் கணிதத்தைக் கொண்டது. இதில் சுருக்குதல், எண்ணியல், கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத்தொடர், சராசரி, சதவீதம், விகிதம் மற்றும் விகித சமம், மீ.பெ.வ, மீ.சி.ம , தனிவட்டி, கூட்டுவட்டி , அளவியல் பாடங்களில் பரப்பளவு மற்றும் கன அளவு , வேலை மற்றும் நேரம் , வேலை மற்றும் தூரம், வயது கணக்குகள் , இலாபம் மற்றும் நட்டம், வடிவியல், இயற்கணிதம் போன்ற தலைப்புகளில் இருந்து கேட்கப்படுகிறது.