TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – கல்வித்தகுதி, வயது வரம்பு & பதவிகள்! முழு விபரம் இதோ!
தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் சிறப்பான வழிமுறைகளை குறித்து காண்போம்.
குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதில் குரூப் 4, மற்றும் குரூப் 2 தேர்வுக்கான அட்டவணையை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. அதில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும். இதற்கான 5255 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகள் வரும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதில் குரூப் 4 தேர்விற்கு தான் லட்சக்கணக்கான போட்டியாளர்கள் தங்களை தயார்படுத்தி கொண்டுள்ளனர்
அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் – மாநில அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!
ஏனெனில் குரூப் 4 தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிந்தால் போதுமானது. மேலும் 300 மதிப்பெண்கள் கொண்ட ஒரே ஒரு எழுத்துத் தேர்வினை கொண்டது. அத்துடன் நேர்முகத் தேர்வு இப்பதவிகளுக்கு கிடையாது. மேலும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வு நடத்தப்படவில்லை. அதனால் இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஏராளமான நபர்கள் குரூப் 4 தேர்வுக்கு தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். எனவே குரூப் 4 தேர்வு மிகுந்த போட்டியாளர்களை கொண்டதாக இருக்கும். அதனால் இந்த குறைந்த இடைவெளியில் எப்படி விரைவாக குரூப் 4 தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
முதலில் தமிழ் மொழி பாடப்பகுதியை பற்றி பார்ப்போம். தற்போது தமிழ் மொழிப் பாடப்பிரிவை தகுதித் தேர்வாக நிர்ணயித்துள்ளதால், பாடத்திட்டத்தில் மாற்றம் வந்தாலும் வரலாம். இதனை தொடர்ந்து 6 முதல் 10 வகுப்பு வரையிலான பள்ளி பாட புத்தகங்களிலிருந்து தமிழ் வினாக்கள் கேட்கப்படுகின்றன. ஆதலால் முதலில் 6 முதல் 10 வகுப்பு வரையிலான தமிழ் பாடப் புத்தகங்களை மட்டும் தெளிவாக படித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதிக நேரம் இருந்தால் 11 மற்றும் 12 வகுப்பு தமிழ் புத்தகங்களையும் படித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு படித்தாலே போதும் 90 முதல் 95 வரை மதிப்பெண்களை பெற முடியும்.
அதற்கு அடுத்த நிலையில் பொது அறிவு பகுதியில் 100 வினாக்களில் 75 வினாக்கள் பொது அறிவாகவும், 25 வினாக்கள் திறனறி வினாக்களாகவும் கேட்கப்படும். இதற்கும் 6 முதல் 10 வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பள்ளி பாடபுத்தகத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அடுத்ததாக நடப்பு நிகழ்வுகளுக்கு தேர்வு அறிவிப்புக்கு 6 மாதம் முதல் 1 வருடம் வரையிலான செய்திகளை படிக்க தொடங்க வேண்டும். தினசரி நடப்பு நிகழ்வுகளை தொடர்ச்சியாக படித்து கொள்ள வேண்டும்.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
அடுத்தாக கணித பகுதி 6 முதல் 10 வகுப்பு வரையிலான கணித பாடப்பகுதியை முழுமையாக படிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் கணிதத்திற்கு என்று 2 மணி நேரம் ஒதுக்கி பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் பெரும்பாலும் பள்ளி பாடப் புத்தகங்களில் இருந்தே கேட்கப்படுவதால் பள்ளி புத்தகங்களை முழுமையாக படித்து பயிற்சி பெற்றாலே போதும் தேர்வில் எளிதாக வெற்றி பெற முடியும். இத்தேர்வு மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் , சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் போன்ற பணியிடங்களில் பணி புரியலாம்.
கல்வித் தகுதி
குரூப் 4 தேர்வுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிந்தால் போதுமானது. தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை
இத்தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. இதில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடைபெறும்.
வயது வரம்பு
இத்தேர்வுக்கு 18 வயது முதல் 30 வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் தமிழ்நாடு அரசு விதிகளின் படி குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு சலுகைகளும் உண்டு.