TNPSC குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் 2022 – தேர்வாணையத்தின் முக்கிய அறிவிப்பு!

0
TNPSC குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் 2022 - தேர்வாணையத்தின் முக்கிய அறிவிப்பு!
TNPSC குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் 2022 - தேர்வாணையத்தின் முக்கிய அறிவிப்பு!
TNPSC குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் 2022 – தேர்வாணையத்தின் முக்கிய அறிவிப்பு!

TNPSC தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் மார்ச் மாதங்களில் வெளியிடப்படும் என்று அண்மையில் அறிவிப்பு வெளியானது. இவவறு தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் மத்தியில் எந்த வகையான பாடத்திட்டம் பின்பற்றப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த முக்கிய தகவலை TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

குரூப் 4 தேர்வு

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பணியாளர்களை TNPSC தேர்வாணையத்தின் குரூப் 4, குரூப் 2, குரூப் 2A உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். TNPSC தேர்வாணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்த ஆண்டுக்கான தேர்வுக்கால அட்டவணையை அறிவித்துள்ளது. அதன்படி குரூப் 4 மற்றும் குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்புகள் மார்ச் மற்றும் பிப்ரவரி மாதங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தற்போது TNPSC தேர்வாணையம் நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழியில் தகுதி பெற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் டிச.31க்கு பிறகு முழு ஊரடங்கு உத்தரவு அமல்? மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கம்!

மேலும் குரூப் 4 தேர்வு போன்ற ஒரே நிலை கொண்ட தேர்வில் தமிழ்மொழி தகுதித்தாளில் 40 மதிப்பெண்கள் பெற்றால் தான் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும். அதோடு ஆங்கில பாடப்பகுதி நீக்கப்பட்டு தமிழ் பாடப்பகுதி மட்டுமே இடம்பெறும் என்றும் அறிவித்துள்ளது. அத்துடன் தேர்வர்களுக்கு உதவும் வகையில் பழைய பாடத்திட்டத்திலிருந்து புதிய பாடத்திட்டம் எவ்வாறு மாறுபடும் என்று TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் பொது ஆங்கில பாடம் இடம் பெற்றதால் மீண்டும் தேர்வர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது, தற்போது TNPSC இணையதளத்தில் வெளியிட்ட பாடத்திட்டம் நீக்கப்படும். அதையடுத்து பொதுத்தமிழ், பொது அறிவு ஆகிய பாடங்கள் மட்டுமே உள்ள புதிய பாடத்திட்டம் விரைவில் TNPSC இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் 10ம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் கொள்குறி வகையில் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதில் தமிழ்மொழி பாடப்பகுதியில் 40 மதிப்பெண்கள் பெற்றால் தான் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!