தமிழகத்தை தாக்கும் பன்றிக்காய்ச்சல் – பரிசோதனை தீவிரம்! சுகாதாரத்துறையின் முக்கிய முடிவு!
தமிழகத்தில் கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது பன்றி காய்ச்சலும் பரவி வருவதால் எச்1 என்1 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலும் பரிசோதனையை அதிகப்படுத்த 6000 பரிசோதனை கிட் வாங்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
எச்1 என்1 வைரஸ்:
தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் நோய் தொற்றுகள் அதிகரித்து வருகிறது. தற்போது இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சலால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இருமல், உடல் வலி, சோர்வு, தீராத காய்ச்சல், தொண்டை வலி போன்றவை இந்த காய்ச்சலின் அறிகுறிகள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த காய்ச்சல் எளிதில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. அதனால் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் தனிமையில் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.
அதனை தொடர்ந்து எச்1 என்1 வைரஸ் அதாவது பன்றிக்காய்ச்சலும் பரவி வருகிறது. இது பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடம் இருந்து பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, சுவாசிப்பதில் பிரச்சனை, வீங்கிய கண்கள், சளித் தொந்தரவு, தொண்டை வலி போன்றவை இந்த பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகளாகும். தற்போது கோவை மாவட்டத்தில் 5 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு ஊழியர்களுக்கு அடித்த பம்பர் லாட்டரி? தீபாவளி போனஸ் ரெடி!
Exams Daily Mobile App Download
தற்போது காய்ச்சல் அறிகுறியுடன் வருவதில் பாதிப்பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதனால் எச்1 என்1 பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த 15 நாட்களில் 6000 பரிசோதனை கிட் வாங்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. நேற்று வரை தமிழகத்தில் 5,064 பேருக்கு காய்ச்சல் காரணமாக எச்1 என்1 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 1267 பேருக்கு இன்ஃப்ளூயென்ஸா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்