இந்தியாவில் 39 பள்ளிகளுக்கு ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் விருது – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்!
இந்தியாவில் ஆண்டுதோறும் குடிநீர்,தூய்மை, சுகாதாரம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2021- 2022 கல்வியாண்டுக்கான ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் விருது 39 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விருது:
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்கும் வண்ணம் மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் நோக்கில் கல்வி செயல்பாடுகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதில் தாய்மொழிக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் தாய்மொழியில் கல்வி பயில முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மருத்துவ படிப்புக்கான பாடப்புத்தங்கங்கள் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது.
AIIMS: ஏப்ரல் 1, 2023 முதல் ‘டிஜிட்டல்மயமாக்கம்’ – வெளியான சூப்பரான அறிவிப்பு!!
Exams Daily Mobile App Download
மேலும் பள்ளிகளில் கல்வி மட்டுமல்ல அடிப்படை வசதிகளையும் மாணவர்களுக்கு குறைவில்லாமல் தரமானதாக அளிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி குடிநீர்,தூய்மை, சுகாதாரம் ஆகியவற்றை சிறந்த முறையில் அளிக்கும் பள்ளிகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் விருதை வழங்கி வருகிறது . நடப்பு ஆண்டு இந்தியாவில் மொத்தம் 39 பள்ளிகளுக்கு ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள 10 பள்ளிகள் விருது பெற்று முதலிடத்தில் உள்ளது. அதில் 5 பள்ளிகள் அரசு பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து புதுச்சேரி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.