மருத்துவத் துறைக்கான நோபல் பரிசை வென்ற ஸ்வான்டே பாபோ – அறிவிப்பு வெளியீடு!
2021-ம் ஆண்டிற்கான நோபல் பரிசை வென்றவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. அதில், குறிப்பாக மருத்துவ துறைக்கான நோபல் பரிசை ஸ்வான்டே பாபோ அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு:
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவமும் உடலியங்கியல், அமைதி, பொருளியல் போன்ற துறைகளில் மக்களின் நலனிற்காக உழைத்தவர்களுக்கும், சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர்களுக்கும் ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இவர்களின் கண்டு பிடிப்பினால் மனித குலத்திற்கான சிறந்தவை கண்டுபிடிக்கப்படுவதால் அவர்களை கவுரவிப்பதற்காக தான் நோபல் பரிசு அளிக்கப்படுகிறது.
தற்போது உலகின் மிக உயரிய பரிசாக நோபல் பரிசு கருதப்படுகிறது. இதனால் நோபல் பரிசை பெற்றவர்களும் மதிப்பு மிக்க நபர்களாக சிறப்பிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், கடந்த ஆண்டில் இந்த துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில், மருத்துவ துறைக்கான நோபல் பரிசை ஸ்வான்டே பாபோ என்ற ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவருக்கு அளிக்கப்பட உள்ளது.
ஆன்லைன் மூலம் பணம் அனுப்புபவரா நீங்கள்? இனி கவலையில்ல.. சிறந்த வழிகள் இதோ!
Exams Daily Mobile App Download
இவர், மனித பரிணாம வளர்ச்சியில் மரபியல் சார்ந்த ஆய்வில் சாதித்ததற்காக ஸ்வான்டே பாபோவிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற துறைகளுக்கான நோபல் பரிசை பெற்றவர்களின் விவரங்கள் இனி வரும் நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. நோபல் பரிசை பெற்றதற்காக ஸ்வான்டே பாபோவிற்கு பல தரப்பை சேர்ந்த மக்களும், தலைவர்களும் தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்