IPL 2022 லீக்: மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு – முதல் ஆட்டத்தை தவறவிடும் சூர்யகுமார் யாதவ்?
மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் நட்சத்திர பேட்டரான சூர்யகுமார் யாதவ் மார்ச் 27ம் தேதியன்று டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டத்தில் இருந்து வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
IPL 2022:
இந்த ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் துவங்க இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் பல்வேறு அணிகளும் போட்டிகளுக்காக தங்களை தயார் செய்து வருகின்றனர். இந்த சீசனில் இந்தியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் உட்பட சில வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது CSK அணியில் இடம்பிடித்துள்ள தீபக் சஹார், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிடக்கூடும் என்றும், சில வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டி காரணமாக சில IPL ஆட்டங்களை இழக்க நேரிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
இப்படி இருக்க தற்போது மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் நட்சத்திர பேட்டரான சூர்யகுமார் யாதவ் கட்டைவிரல் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அதனால் அவர் மார்ச் 27ம் தேதியன்று டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டத்தில் இருந்து வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்ட நான்கு வீரர்களில் ஒருவரான யாதவ், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரின் போது காயம் அடைந்தார்.
இப்போது காயத்தில் இருந்து குணமடைந்து வரும் சூர்யகுமார் யாதவ் MI அணியின் சார்பில் முதல் போட்டியில் விளையாடாவிட்டாலும், ஏப்ரல் 2 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் MI அணியின் முதல் ஆட்டத்திற்கு பிறகு அவர்களுக்கு ஏப்ரல் 2 ஆம் தேதியன்று தான் அடுத்த ஆட்டம் இருக்கிறது. இதற்கிடையில் ஐந்து நாட்கள் இடைவெளி உள்ளது. அதற்குள் யாதவ் 100 சதவீதம் பொருத்தமாக இருப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்கிடையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுடன் பயோ-பப்பிலில் நுழைந்திருக்கிறார். இவர்கள் இருவரும் MI அணிக்கான தங்களது பயிற்சி ஆட்டத்தை விரைவில் துவங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.