இந்தியாவில் வீட்டு செலவு தொடர்பான கணக்கெடுப்பு பணி – ஆகஸ்ட் 1 முதல் துவக்கம்!
ஒவ்வொருவரின் வீட்டிலும் எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பது தொடர்பான கணக்கீட்டு பணி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் துவங்க இருப்பதாக தேசிய புள்ளியியல் துறை துணை இயக்குனர் காஞ்சனா கோஷ் தெரிவித்துள்ளார்.
கணக்கெடுப்பு பணி
தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் வீட்டிலும் எவ்வளவு செலவு செய்யப்படுகின்றன என்பதை தேசிய புள்ளியியல் துறை சார்பில் சமூக பொருளாதார கணக்கெடுப்பின் கீழ் வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கணக்கெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட போகும் பணியாளர்களுக்கு நேற்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதாவது, ஒவ்வொரு பகுதியிலும் வசிக்கும் மக்களின் பெயர், கல்வித் தகுதி, செலவுகள் உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்குமான விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
Exams Daily Mobile App Download
உணவு, கல்வி, மருத்துவம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என மூன்று வகைகளாக பொதுமக்களிடம் கேள்விகள் கேட்கவுள்ளனர். மேலும், கடந்த 30 நாட்களில் என்னென்ன செலவுகள் செய்தார்கள் எனவும், ஒரு ஆண்டு முழுவதும் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பது வரைக்கும் விவரங்கள் சேகரிக்கவுள்ளனர். இதனையடுத்து, சேகரித்த மக்களின் தோராயமான செலவுகள் குறித்த விபரங்கள் அனைத்தும் தரவுகளாக மாற்றப்படவுள்ளது.
தீவிரமடையும் குரங்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி எப்போது? வெளியான அப்டேட்!
மேலும், இந்த கணக்கெடுப்பு பணி ஆகஸ்ட் மாதத்தில் துவங்கி 2023ம் ஆண்டு ஜூலை வரை நடைபெற இருக்கிறது. மேலும், இந்த கணக்கெடுப்பு பணி அரசின் கொள்கை முடிவுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இதனால், கணக்கெடுக்க வரும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும், கணக்கெடுப்பாளர்களும் முழு ஈடுபாட்டுடன் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் தேசிய புள்ளியியல் துறை துணை இயக்குனர் காஞ்சனா கோஷ் தெரிவித்துள்ளார்.