சோதனை முறையில் அறிமுகமான …உச்ச நீதிமன்றத்தின் RTIக்கான இணையதள போர்டல்!!
உச்ச நீதிமன்றத்திற்கான தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு தற்போது ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் இணையதள போர்டல் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை
நாட்டில் தகவல் அறியும் உரிமை சட்டம் கடந்த 2005ம் ஆண்டு அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள் ஆகியவற்றின் வெளிப்படைத் தன்மை, ஊழலை கட்டுப்படுத்துதல் ஆகிய காரணங்களுக்காக இச்சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை பயன்படுத்தி பொதுமக்கள் அரசு அலுவலகத்தில் இருக்கும் பொருளை பதிவேடு, ஆவணம், அறிக்கை, மெமொ, சுற்றறிக்கை உள்ளிட்ட வடிவிலான பொருட்களை பெற முடியும்.
Follow our Instagram for more Latest Updates
அதாவது ஒரு தனி நபர் அரசுத் துறை, அரசு உதவி பெறும் தனியார் துறைகளில் நமக்கு தேவையான தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி கேட்டறியலாம். இந்த நிலையில் தற்போது அனைத்து பயன்பாடுகளும் ஆன்லைன் முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் உச்ச நீதிமன்றத்திற்கான தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஆன்லைன் முறையில் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
சென்னை : ஆபரண தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தற்போது பொறுப்பேற்றுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இதற்கான பணிகளை துரிதப்படுத்தினார். அதன்படி தற்போது உச்ச நீதிமன்றத்திற்கான தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கான இணையதள போர்டல் சோதனை முறையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி https://registry.sci.gov.in/rti_app என்ற ஆன்லைன் போர்டல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஆன்லைன் வாயிலாக நீங்கள் RTI தகவல்களை பெறலாம்.