‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

3
'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மாநிலங்கள் தோறும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான திட்டமும் விளக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு திட்டம்:

மத்திய அரசின் அறிவிப்பின் படி, நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மாநில அரசுகள் விரைந்து செயல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு ரேஷன் அட்டைதாரர்கள் எந்த இடத்திலும், எந்த மாநிலத்திலும் சென்று ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

கருப்பு பூஞ்சை மருந்துகளுக்கு GST வரிவிலக்கு – கொரோனா தடுப்பு உபகரணங்களுக்கு வரி குறைப்பு!

இதே போல புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் பெரிதும் உதவும் என மத்திய அரசு விளக்கியுள்ளது. அதே நேரத்தில் இந்தியா முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருவதால், அவர்களுக்கான திட்ட விளக்கத்தையும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்துக்கு மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் இத்திட்டம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கானதால், அனைத்து மாநில அரசுகளும் இதை விரைந்து அமல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து மாநில அரசுகள் சுருக்கமான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. ஒரு ஏரியாவில் இருந்து மற்றோர் ஏரியாவுக்கு மாரினாலே ரேஷன் தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை. ரேஷன் கடை காரர்கள் வாயில் வந்தபடி திட்டுகிறார்கள், இதில் மாநிலம் விட்டு மாநிலம் போனால் என்னவாகும்.

  2. ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் வரவேற்கவேண்டிய் ஒன்றுதான், ஆனால் புலம்பெயர் தொழிலாளர்கள் அந்தந்த மாநிலங்களிலேயே நிரந்தரமாக தங்கிவிடுகின்றனர், பின்பு அவர்கள் தங்கியுள்ள மாநிலங்களில் ஓட்டுரிமையையும் பெற்று விடுகின்றனர், இவர்களால் மாநில நலன்கள் பறிக்கப்படுவதுடன் அந்தந்த மாநில மக்களின் வேலை வாய்ப்புகளும் பறி போகின்றன , புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு ஓடுரிமை அளிக்க கூடாது,

  3. ஒரே நாடு , ஒரே ரேஷன் என்பது மாநில மக்களின் நலனுக்கு எதிரான து.
    ஒரே நாடு என்ற சிந்தனை மக்களின்
    மனதில் இருந்திருந்தால் காவிரி நீர்,
    முல்லை பெரியாறு போன்ற பிரச்சினைகளே வரக்கூடாது.
    இந்தியாவில் மொழி வாரியாகத்தான் மாநிலங்கள் இயற்கையாகவே அமைந்துள்ளது.
    இந்தியன் என்கிற உணர்வை விட
    மாநில , இன உணர்வுகளே முன் எழுகிறது.
    இந்தியாவில் பிற மாநிலங்களில் தமிழனுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படுமா?
    ஆனால் வட இந்தியர்கள் ஏராளமான அரசு வேலைகளில் உள்ளனர்.
    ஒன்றிய அரசு முன் வைக்கும் இது போன்ற திட்டங்களை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும்.
    மாநில நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
    தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டுமே
    அரசு , மற்றும் பிற வேலை வாய்ப்பு கள் வழங்கப்பட வேண்டும்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!