நாடு முழுவதும் தீர்ப்பாயங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
நாடு முழுவதும் உள்ள தீர்பாயங்களில் காலிப்பணியிடங்களை அடுத்த 10 நாட்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
நீதிமன்றம் உத்தரவு:
இந்தியாவில் வருமான வரித் தீர்ப்பாயம், விற்பனை வரித் தீர்ப்பாயம் போன்று பல நிர்வாகத் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தீர்ப்பாயங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டன. எனவே சிறப்பு நடைமுறைகளே அங்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் உள்ள தீர்ப்பாயங்கள் உயர் நீதிமன்றத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் கட்டுப்பட்டவையாக உள்ளன. தீர்ப்பின் மீது சீராய்வு செய்ய உயர், உச்ச நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு.
ஆப்கானிஸ்தான் கடைகளில் பெண்கள் அடங்கிய விளம்பர புகைப்படங்கள் அளிப்பு – தலிபான்கள் அட்டூழியம்!
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்தால் 5 வருடங்கள் அவர்கள் தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதனை மீறும் விதமாக வயது வரம்பை ஓராண்டு குறைத்து நான்கு ஆண்டாக நியமித்து ஒன்றிய அரசு அவரச சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பார் அசோசியேஷன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘நாடு முழுவதும் உள்ள பல்வேறு தீர்ப்பாயங்களில் காலியாக இருக்கும் இடங்களில் உடனடியாக உறுப்பினர்களை நியமித்து அதனை திறம்பட செயல்படுவதற்கான துறைசார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.