உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இனி மாநில மொழிகளில் வெளியிடப்படும் – தலைமை நீதிபதியின் அதிரடி அறிவிப்பு!!
உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார் .
மாநில மொழிகள்:
நாட்டில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் உள்ளதால் பாமர மக்களால் இதனை சரிவர புரிந்து கொள்ள முடிவதில்லை. அதனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மாநில மொழிகளில் வெளியிட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையிலான 6 பேர் கொண்ட குழு ஒன்றை அமைக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.
தமிழக ரயில் நிலையங்களில் உணவு பொருள்களின் விலை ஏற்றம் – ரயில்வே நிர்வாகம் புதிய உத்தரவு!
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் தற்போது முதல் கட்டமாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ், குஜராத்தி, ஹிந்தி, ஒடியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாக உள்ளது. அதன்படி உச்சநீதிமன்ற டிஜிட்டல் ஆவணங்கள் என்ற தளத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்கள் அறிவித்துள்ளார்.
இதற்கான தொழில்நுட்ப வசதிகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக இவர் கூறியதாவது, வருகிற குடியரசு தின விழாவை முன்னிட்டு 1000 வழக்குகளின் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் ஏற்கனவே 52 வழக்குகளின் தீர்ப்புகள் தமிழில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.