NEET PG 2022 : அனைத்து மாநிலங்களும் நவம்பர் 16ஆம் தேதிக்குள் கலந்தாய்வு முடிக்க உத்தரவு!!
நாடு முழுவதும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான (NEET PG) நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இதையடுத்து தற்போது 2ம் சுற்றை நவம்பர் 16ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கலந்தாய்வு
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நீட் எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2022ம் ஆண்டுக்கான முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான (NEET PG) நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் ஜூன் 2ம் தேதி வெளியிடப்பட்டு மாணவர்களின் தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 50% அகில இந்திய மருத்துவ இடங்களுக்கும், 50% மாநில இடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1ம் தேதி அன்று நடைபெற இருந்தது.
Exams Daily Mobile App Download
ஆனால் தரவரிசைப் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக மாணவர்களின் மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது வரை NEET PG தேர்வுக்கான கலந்தாய்வின் முதல் சுற்று மட்டுமே முடிவடைந்து உள்ளது. இதற்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு கர்நாடகா மற்றும் பிகார் மாநிலத்தில் முடிவடையாமல் உள்ளது.
TNPSC குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – நவ.13 இலவச மாதிரித்தேர்வு!
Follow our Instagram for more Latest Updates
இதனை விரைவில் நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். இந்த நிலையில உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, முதுகலை மருத்துவ படிப்பிற்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வினை வருகிற நவம்பர் 16ஆம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களும் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.