WhatsApp பயனாளர்களுக்கு சூப்பர் அப்டேட் – விரைவில் அறிமுகம்!
மக்கள் அதிகம் பயன்படுத்தும் தகவல் பரிமாற்றம் செய்யும் செயலியான வாட்ஸ்ஆப் தனது வாடிக்கையாளர்களுக்கு பல புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது அறிமுகம் செய்துள்ள புது அறிவிப்பு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வாட்ஸ்ஆப் செயலி:
ஆண்ட்ராய்டு செயலியான வாட்ஸ்ஆப் தற்போது உலகம் முழுவதும் பல தரப்பு மக்களால் பயன்படுத்தும் ஒரு தகவல் பரிமாற்றம் செய்யும் செயலியாக இருக்கிறது. உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கிறது. தனி நபரிடம் மட்டுமில்லாமல் குழுக்கள் மூலமாக சேர்ந்து பேசும் வசதியும் இருக்கிறது.
Exams Daily Mobile App Download
மேலும் வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல புதிய வசதியை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்ஆப் குழு அட்மின்கள், தாங்கள் நிர்வகிக்கும் குழுக்களில் பிறர் பகிரும் மெசேஜ்களையும் நீக்கும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் மூலம் தேவை இல்லாத அல்லது சர்ச்சையை ஏற்படுத்தும் செய்திகளை குழு உறுப்பினர்கள் பகிர்ந்தால் அதனை விரைவில் நீக்க முடியும்.
இந்திய மக்களுக்கு பிரதமர் முக்கிய வேண்டுகோள் – அறிவிப்பு வெளியீடு
அது மட்டுமில்லாமல் இந்த வசதி மூலமாக தேவை இல்லாமல் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மேலும் தற்போது பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள இந்த அம்சம், விரைவில் அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது. இந்த புதிய வசதிக்கு ஏகப்பட்ட வாட்ஸ்ஆப் பயனாளர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். விரைவில் இந்த வசதி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.