விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ 8 வின்னர் ஸ்ரீதர் சேனா செய்த காரியம் – மக்களுக்கு நன்றி கூறி பதிவு!

0
விஜய் டிவி 'சூப்பர் சிங்கர்' 8 வின்னர் ஸ்ரீதர் சேனா செய்த காரியம் - மக்களுக்கு நன்றி கூறி பதிவு!
விஜய் டிவி 'சூப்பர் சிங்கர்' 8 வின்னர் ஸ்ரீதர் சேனா செய்த காரியம் - மக்களுக்கு நன்றி கூறி பதிவு!
விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ 8 வின்னர் ஸ்ரீதர் சேனா செய்த காரியம் – மக்களுக்கு நன்றி கூறி பதிவு!

‘சூப்பர் சிங்கர் சீசன் 8’ நிகழ்ச்சியில் தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ள டைட்டில் வின்னர் ஸ்ரீதர் சேனா, தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி கூறி தனது முதல் பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வின்னர் ஸ்ரீதர் சேனா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘சூப்பர் சிங்கர்’ தற்போது 8ஆவது சீசன்களை கடந்திருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் துவங்கிய இந்த சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், பென்னி தயாள், அனுராதா, கல்பனா ஆகியோரின் தலைமையில் போட்டிகள் நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டு வந்த நிலையில், நிகழ்ச்சியின் பார்மேட் படி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வந்தனர்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ப்ரோமோ ஒன்னு, கதை ஒன்னு – குழப்பத்தில் தவிக்கும் ரசிகர்கள்!

அந்த வகையில் சூப்பர் சிங்கர் சீசன் 8 போட்டியின் இறுதிக்கட்டத்தில் பரத், முத்துசிற்பி, மானஸி, அபிலாஷ், அனு ஆகியோருடன் வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த ஸ்ரீதர் சேனாவும் களம் கண்டனர். இந்த இறுதி போட்டியில் நிகழ்ச்சியின் நடுவர்கள் கொடுத்த மதிப்பெண்களுடன் ரசிகர்களின் ஏகபோக ஆதரவையும் பெற்று ஸ்ரீதர் சேனா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து 2ஆவது இடத்தில் பரத் மற்றும் அபிலாஷ் 3 ஆவது இடத்தையும் பெற்றிருந்தனர்.

இந்த போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட ஸ்ரீதர் சேனா, ஒரு கச்சேரி பாடகர் ஆவார். கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் இந்த நிகழ்ச்சியின் பாதியிலேயே ஸ்ரீதர் சேனா வெளியேற்றப்பட்டார். அப்போதில் இருந்தே ஸ்ரீதர் சேனாவுக்கு, ரசிகர்கள் ஏகப்பட்ட ஆதரவுகளை கொடுத்து வந்தனர். இதன் மூலமாக அவர் இறுதி போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பழைய ஐஸ்வர்யா – கண்ணனுடன் வெளியான வீடியோ!

இந்நிலையில் பாடகர் ஸ்ரீதர் சேனா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன்னை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கு தனது நன்றியை வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார். அதாவது, ‘எனக்கு இந்த வெற்றி கிடைக்க காரணம் நீங்கள் தான். எல்லாருக்கும் மிக்க நன்றி. அனைவரும் என்னை உங்கள் வீட்டு பையனாக பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. இந்த அன்பும் ஆதரவும் எப்போதும் நீடிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!