பிக் பாஸ்க்கு பிறகு மீண்டும் ‘சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி’க்கு திரும்பிய ப்ரியங்கா – ரீஎன்ட்ரி ப்ரோமோ!
விஜய் டிவியில் அனைத்து விதமான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வரும் ப்ரியங்கா பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள சென்றார். இவர் மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தற்போது திரும்பியுள்ளார்.
ப்ரியங்கா ரீஎன்ட்ரி:
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதன் தொகுப்பாளர் நிகழ்ச்சியை கொண்டு செல்வதை பொறுத்து தான் அதன் ரீச் மக்கள் மத்தியில் நிர்ணயிக்கப்படுகிறது. எந்த ஒரு சூழ்நிலையையும் கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றும் திறன் தொகுப்பாளரிடம் தான் உள்ளது. அப்படி தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை தன்னை தவிர வேறு யாரும் இதை விட சிறப்பாக செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கி இருப்பவர் தொகுப்பாளர் ப்ரியங்கா.
குக் வித் கோமாளி சீசன் 3 ல் ‘புஷ்பா’ வாக களம் இறங்கிய பாலா – கலகலப்பான ப்ரோமோ!
இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒல்லி பெல்லி என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு விஜய் டிவியின் தவிர்க்கமுடியாத தொகுப்பாளராக மாறி விட்டார். படிப்படியாக முன்னனி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களிடமும்,நடுவர்களிடமும் மிகவும் விளையாட்டு தனமாக நடந்து கொள்வார்.
விஜய் டிவி “வைதேகி காத்திருந்தாள்” சீரியலில் களமிறங்கிய “ராஜபார்வை” நடிகர் – ப்ரோமோ ரிலீஸ்!
இதனாலேயே பிரியங்காவை அனைவருக்கும் பிடிக்க தொடங்கியது. இந்நிலையில் தான் ப்ரியங்கா பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 100 நாட்கள் வரை அங்கு போட்டி போட்டுள்ளார். இதனால் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் அவருக்கு பதில் மைனா தொகுத்து வழங்கினார். இந்நிலையில், வரும் வாரத்திற்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ப்ரியங்கா அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக திடீரென்று வருகிறார். இதனால் அனைவரும் மகிழ்ச்சியில் அழுவது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.