தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் – அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். மேலும் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1000 வழங்குவது குறித்து முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மகளிர் சுய உதவிக் குழு கடன்:
தமிழகத்தில் உள்ள கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூக வளர்ச்சிக்காகவும் குழுவாக இணைந்து செயல்படுவதே மகளிர் சுய உதவிக் குழுவின் முக்கியமான நோக்கமாகும். ஏகப்பட்ட ஏழை எளிய பெண்கள் இந்த குழுக்கள் மூலமாக பலன் அடைந்து இருக்கின்றனர். மேலும் அரசு சார்பில் இந்த குழுக்களுக்கு கடன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த கடன்கள் திரும்ப வசூலிக்க முடியாத நிலை இருப்பதால், அதனை தள்ளுபடி செய்து ரசீது வழங்கப்படும் என அரசு ஏற்கனவே அரசாணை வெளியிட்டது.
பிரெஞ்ச் அரசின் ‘செவாலியர் விருது’ பெற்ற கர்நாடக பாடகி அருணா சாய்ராம் – குவியும் வாழ்த்துக்கள்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என ஏற்கனவே அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருந்தார். தற்போது அவர் பேசுகையில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் சுயஉதவி குழுக்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் கடன் உதவி வழங்கப்பட உள்ளது என தெரிவித்த அவர், மேலும் திமுக ஆட்சி பொறுப்பேற்றால் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்க இருப்பதாக முதல்வர் வாக்குறுதி அளித்து இருக்கிறார். அது குறித்து முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என அவர் உறுதியளித்து இருக்கிறார்.