தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சூப்பர் திட்டம் – அறிவிப்பு வெளியீடு!

0
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சூப்பர் திட்டம் - அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சூப்பர் திட்டம் - அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சூப்பர் திட்டம் – அறிவிப்பு வெளியீடு!

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வருகிறது. அதிலும் கல்வி அறிவை மேன்மேலும் வளர்க்கும் விதமாக எண்ணும், எழுத்தும், ரீடிங் மாரத்தான், ஆங்கில பேச்சு பயிற்சி உள்ளிட்ட திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மாணவர்களை கவரும் வண்ணம் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சிறார் திரைப்பட விழா:

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் தான் பள்ளிகள் சரியான நேரத்தில் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட கற்றல் விளைவை சரி செய்யும் பொருட்டு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எண்ணும், எழுத்தும், ரீடிங் மாரத்தான், இல்லம் தேடி திட்டம், போதனை வகுப்பு ஆகிய திட்டங்களை தொடர்ந்து தற்போது சிறார் திரைப்பட விழா நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாணவர்களின் சிந்தனை செயல்பாடுகளால் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தற்போதைய தொழில்நுட்ப உலகில் நகர்ப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு இணைய பயன்பாடு என்பது மிகவும் எளிதான ஒன்றாகி விட்டது. அதே ஒரு கிராமபுற மாணவனுக்கு இணையம் என்றால் என்ன என்பதே தெரியவில்லை அண்மையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராமப் பள்ளியில் பயில கூடிய மாணவருக்கு சார்லி சாப்ளின் யார்? என்று கேட்டால் தெரியவில்லை குழந்தைகளுக்குப் பிடித்தமான மிஸ்டர் பீன் என்பவரையும் தெரியவில்லை . நவீன உலகில் அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை மட்டும் இது மிகவும் வேதனை அளிக்கிறது.

தமிழகத்தில் இம்மாவட்டத்திற்கு ஜூலை 11 உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அதே நகர் புறத்தில் பயிலும் மாணவர்கள் தனியார் பள்ளியில் படிக்கச் கூடிய குழந்தைகள் ஓடிடி தளங்களைப் பற்றிச் சொல்கிறார்கள். அதில் பார்த்த திரைப்படங்களைப் பற்றிப் கூறுகின்றனர். நம் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அவையெல்லாம் எட்டவேண்டாமா? இதனைக் கருத்தில் கொண்டு தற்போது சிறார் திரைப்பட விழா கொண்டு வரப்பட்டுள்ளது. மாதந்தோறும் 2 ம் வாரம் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும் என்று தெரிவித்துள்ளது. இத்திரையிடலுக்கென தனியே பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென ஓர் ஆசிரியர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அவருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களுடைய சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் ஏற்படுத்தும் தாக்கத்தை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று கூறுகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!