Post Office இல் மாதம் ரூ.550 ரிட்டன்ஸ் பெறும் சூப்பர் சேமிப்பு திட்டம் – முழு விபரம் இதோ!
இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒன்றான மாத வருமான திட்டம் எதிர்காலத்திற்கு பயனளிக்க கூடியதாக உள்ளது. இத்திட்டம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
மாத வருமான திட்டம்:
இந்திய அஞ்சல் துறை ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் குறைந்தபட்ச டெபாசிட் தொகை மக்களுக்கு ஏற்ற வகையில் உள்ளதால் மக்களுக்கும் இத்திட்டங்களில் சேர ஆர்வம் காண்பிக்கின்றனர். ஒவ்வொரு திட்டத்திற்கு தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் உள்ளது. இதனால் சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் தொகை கிடைக்கிறது. ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக திட்டங்கள் நல்ல பலனை அளிக்கிறது.
ExamsDaily Mobile App Download
ஏனெனில் உங்களின் பணத்திற்கு 100% பாதுகாப்பை அளிக்கிறது. கடந்த 2020ல் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் சேருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அஞ்சலகங்களில் உள்ள மற்ற திட்டங்களை தொடர்ந்து மாத வருமான திட்டத்தில் 50,000 ரூபாய் டெபாசிட் செய்தாலே உங்களுக்கு மாதத்துக்கு 275 ரூபாய் வரை நீங்கள் வருமானமாக பெறலாம். இத்திட்டத்தில் 6.6% வட்டி வழங்கப்படுகிறது.
BEL நிறுவனத்தில் 10ம் வகுப்பு படித்தவர்க்கு வேலைவாய்ப்பு – 90+ காலிப்பணியிடங்கள்..!
ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.4.5 லட்சம் வரையில் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதுவே ஜாயிண்ட் அக்கவுண்டாக இருந்தால் அதிகபட்ச டெபாசிட் தொகை ரூ.9 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். 10 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இந்தியக் குடிமகனும் 1000 ரூபாய் செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம். ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் மாதத்துக்கு 550 ரூபாய் அல்லது வருடத்திற்கு ரூ.6,600 கிடைக்கும்.