தமிழகத்தில் சார் பதிவாளர் பணியிடங்கள் – வெளியான சூப்பர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் சார் பதிவாளர் பணியிடங்கள் - வெளியான சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் சார் பதிவாளர் பணியிடங்கள் - வெளியான சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் சார் பதிவாளர் பணியிடங்கள் – வெளியான சூப்பர் அறிவிப்பு!

தமிழக பதிவுத்துறையில் உதவியாளர் நிலையில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களை நிரப்ப தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து சார் பதிவாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் அரசு துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்புகளை தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மே மாதம் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் ஆகிய துறைகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஜூலை மாதம் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து, கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்குக்கான தேர்வு நடத்தப்பட்டது.

2022 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு – தேர்வுக்குழு அறிவிப்பு!

இந்த தேர்வு முடிவடைந்ததை அடுத்து விடைக்குறிப்பு, கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டது. ஆனால் இன்னும் தேர்வின் முடிவுகள் வெளியாகவில்லை. இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனையடுத்து அடுத்து வரும் நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வாணையம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பதிவுத்துறையில் உதவியாளர் நிலையில் உள்ள 200 இரண்டாம் நிலை சார் பதிவாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

தற்போது தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் முழுநேர சார் பதிவாளர்கள் இல்லை என்று புகார் வந்துள்ளது. அதனால் உதவியாளர்களே பொறுப்பு சார் பதிவாளர்களாகவும் பணி செய்து வருகின்றனர். அதனால் உதவியார்களாக உள்ளோருக்கு இரண்டாம் நிலை சார் பதிவாளர் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இடஒதுக்கீடு சுழற்சி முறை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. அதனால் பணி நியமனங்களில் பிரச்சனை ஏற்பட்டது.

இதனை சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து தற்போது மீண்டும் இரண்டாம் நிலை சார் பதிவாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக சார் பதிவாளர் தெரிவித்துள்ளார். அதற்கான உதவியாளர்களின் தகுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 2010 – 11 முதல் 2022 – 23 வரை பணியில் உள்ளோர் இடம் பெற்றுள்ளனர். முதற்கட்டமாக 200 பேருக்கு விரைவில் பணிகள் ஒதுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!