தமிழக பள்ளி மாணவிகளுக்கான சூப்பர் திட்டம் – IG துவக்கி வைப்பு!
தமிழக அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவிகளுக்கு என்று சிறப்பான ஒரு புது திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் வன்முறைக்கு எதிராக பாதுகாப்பினை உறுதிப்படுத்த இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மாணவிகளுக்கான திட்டம்
தமிழக பள்ளிகளில் படித்து வரும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு என்று பல வித சலுகைகள் மற்றும் புதிய திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் படித்து வரும் மாணவிகளுக்கு என்று பாலியல் ரீதியான பிரச்சனைகள் வந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மூலமாகவே இது போன்ற தொல்லைகள் அதிகரித்து வருகிறது. பள்ளிகளில் படித்து வரும் மாணவிகளின் பெற்றோர்களும் இது போன்ற புகார்களை காவல் துறையினரிடம் கொண்டு சேர்ப்பதில்லை. இதனால் தொடர்ந்து இது போன்ற பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது.
இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக காவல்துறை பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மாணவிகளுக்கு தங்களை தாங்களே எவ்வாறாக பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடல்கள், மனநல ஆலோசனைகள் என்று பல விதங்களில் காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது கோவை காவல் துறையினர் தமிழக அரசு பள்ளி மாணவிகளின் நலனுக்காக என்று புதிய திட்டத்தினை துவக்கி வைத்துள்ளனர்.
Post Office ல் 415 ரூபாய் செலுத்தினால் பெரும் லாபம் தரும் திட்டம் – முழு விவரங்கள் உள்ளே!
Exams Daily Mobile App Download
‘பிராஜக்ட் பள்ளிக்கூடம்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த திட்டத்தில் மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியினை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கோவை மாவட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர். பாதுகாப்பிற்காக பெண்கள், குறிப்பாக பள்ளி மாணவிகள் துப்பாக்கி சுடுவதை கற்று கொள்வது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. இது மாணவிகள் மத்தியில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்