Post Office ல் மாதம் ரூ.2500 வரை வட்டி கிடைக்கும் சூப்பரான திட்டம் – முழு விவரம் இதோ!

0
Post Office ல் மாதம் ரூ.2500 வரை வட்டி கிடைக்கும் சூப்பரான திட்டம் - முழு விவரம் இதோ!
Post Office ல் மாதம் ரூ.2500 வரை வட்டி கிடைக்கும் சூப்பரான திட்டம் - முழு விவரம் இதோ!
Post Office ல் மாதம் ரூ.2500 வரை வட்டி கிடைக்கும் சூப்பரான திட்டம் – முழு விவரம் இதோ!

சேமிப்பு திட்டங்களில் மிகவும் பாதுகாப்பான முதலீட்டாகவும், நல்ல வருமானம் கிடைக்கும் திட்டங்களாகவும் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்த பணத்தை, குறுகிய காலத்தில் இரட்டிப்பாக மாற்றிட முடியும். அந்த வகையில் தேசிய சேமிப்பு கணக்கு, மாதம் ரூ.2500 வரை வட்டியை அள்ளி தரும் திட்டமாக சிறந்து விளங்குகிறது

Post Office சேமிப்பு திட்டங்கள்

தேசிய சேமிப்பு சான்றிதழ் என்பது ஒரு நிலையான வருமான முதலீட்டுத் திட்டம் ஆகும். இந்த திட்டத்தை ஒருவர் எந்த ஒரு வங்கியிலோ அல்லது தபால் நிலையத்திலோ எளிதாக திறக்கலாம். இது ஒரு சேமிப்பு பத்திர திட்டம், இதன் முதன்மை நோக்கம் என்பது, சிறிய மற்றும் நடுத்தர வருவாய் முதலீட்டாளர்களை, முதலீடு செய்ய வைப்பது தான். மேலும் MIS கணக்கைத் திறக்க விரும்பும் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள், கணக்கைத் திறப்பதற்கான குறைந்தபட்சத் தொகை ரூ. 1,000 என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அஞ்சலகத்தின் வழிகாட்டுதல்களின்படி, அதன்பின் வைப்புத்தொகை ரூ.1,000 மடங்குகளில் இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

இதையடுத்து அதிகபட்ச முதலீட்டு வரம்பு ஒற்றைக் கணக்கிற்கு ரூ.4.5 லட்சமாகவும், கூட்டுக் கணக்குகளுக்கு ரூ.9 லட்சமாகவும் இருக்கும். ஒரு தனிநபர் அதிகபட்சமாக ரூ 4.5 லட்சத்தை MIS இல் முதலீடு செய்யலாம். இந்த மாதாந்திர வருமான திட்டத்தின் கீழ் யாராவது கூட்டுக் கணக்கைத் திறந்து அதில் ரூ .9 லட்சம் வரை டெபாசிட் செய்தால், அவர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ .4,950 சம்பாதிக்கலாம்.இதுவே தனிக் கணக்கு என்றால் மாதம் ரூ.2,475 பெறலாம். ஏனெனில் இந்த சேமிப்பு கணக்கில் அசல் மீது 6.6% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

எனவே, நீங்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 4,950 ரூபாய் வட்டி பெறுவீர்கள். மேலும் உங்கள் விருப்பத்தின் பேரில் இந்த திட்டத்தின் முதிர்வு காலத்தை அதிகரிக்கலாம். வட்டியை நீங்கள் ஒவ்வொரு மாதமும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இந்த வழியில், உங்கள் முதலீட்டில் அசல் தொகையை பாதிக்காமல் மாதந்தோறும் வட்டியை பெறுவீர்கள்.

JIPMER பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம் ரூ: 2,15,900/-

குழந்தைகளுக்கு தபால் அலுவலக எம்ஐஎஸ் கணக்கு:

ஒரு தபால் அலுவலக MIS கணக்கை மைனர் சார்பாக ஒரு பாதுகாவலரால் திறக்க முடியும், அதே நேரத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் தனது சொந்த பெயரில் கணக்கைத் திறக்கலாம். ஒவ்வொரு மாதமும் பெறப்படும் வட்டியுடன், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை செலுத்தலாம் அல்லது அதைத் தங்கள் குழந்தையின் நலனுக்காக மற்ற பகுதிகளுக்கும் பயன்படுத்தலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!