மத்திய அரசின் சூப்பர் ஓய்வூதிய திட்டம் – மாதம் ரூ.18,500 பெறுவதற்கான வழிமுறைகள்!
நாட்டில் வயது முதிர்ந்தவர்களுக்கு என்று பல சிறப்பு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதிலும், மத்திய அரசின் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் பயனர்களுக்கு சிறப்பு வசதிகளும் அளிக்கப்படுகிறது.
ஓய்வூதிய திட்டம்:
இந்தியாவில் பொதுவாக ஓய்வு பெறும் வயது 60 என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஓய்வு காலத்தில் நாம் மகிழ்ச்சியாக எந்த வித சிரமமும் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் நமது இளம் வயதில் கடினமாக உழைத்து, சிறந்த முறையில் நமது பணத்தை முதலீடு செய்ய வேண்டும். மேலும் அதற்கு போதுமான அளவு திட்டமிடல் அவசியம் வேண்டும்.
60 வயதை அடைந்த முதியவர்கள், பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) திட்டத்தின் மூலம் சிறப்பான பலன்களை அடைவதற்கான வழிகள் உள்ளது. இந்த திட்டத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் முதலீடு காலமாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் பட்சத்தில் மாதம் ரூ.18,500 ஓய்வூதியமாக வழங்கப்படும். இதில், முதியவர்களுக்கான மானியமும் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 2023 மார்ச் மாதத்திற்குள் பயனர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
IT ஊழியர்களே உஷார்! இதை மட்டும் செய்யாதீங்க.. கண்காணிக்கும் நிறுவனங்கள்!
Exams Daily Mobile App Download
மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் முதலீடுகள் செய்யலாம். இந்த திட்டத்தில் முதியவர்கள் சேர்வதால் நல்ல மாத ஓய்வூதிய பலனை பெறலாம். பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்திற்கான முதலீட்டிற்க்கான வட்டி விகிதம் 7.40% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்