மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சூப்பர் வாய்ப்பு – மொத்தம் 2.60 லட்சத்தை தாண்டும் பலன்கள்!
மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 34 சதவீத டிஏ பெற்று வருகிறார்கள். மேலும் 4 சதவீத உயர்வை பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் டிஏ உயர்வுக்கு மேலும் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு ஊழியர்கள் ரூ.2.6 லட்சம் வரை மொத்த பலனைப் பெற வாய்ப்புள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
7வது ஊதியக் குழுவின் படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான தற்போதைய அகவிலைப்படி மற்றும் DR 34 சதவீதம் ஆகும். ஜூலை மாதம் புதிய டிஏ மற்றும் டிஆர் விகிதங்களை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது. அப்போது டிஏ மேலும் 4 சதவீதம் உயரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதாவது, அகவிலைப்படி 38 சதவீதத்தை எட்டும் என்றும், அவை ஆகஸ்ட் மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்பட வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
மத்திய அரசு ஊழியர்கள் அடிப்படை ஊதியம் மற்றும் பணியின் நிலை அடிப்படையில் அகவிலைப்படியை பெறுகின்றனர். ஊழியர்கள் தங்கள் அகவிலைப்படி உயர்வு பெறுவதற்கான கணக்கீடு எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை பின்வருமாறு அறிந்து கொள்ளலாம்.
கணக்கீடு:
அடிப்படை சம்பளம் – ரூ.31,550
அகவிலைப்படி உயர்வு 4 சதவீதம் மற்றும் டிஏ 38 சதவீதம் – டிஏ மாதத்திற்கு ரூ.11,989
தற்போதைய அகவிலைப்படி 34 சதவீதம் – மாதத்திற்கு ரூ.10,727
அதிகரித்த DA – மாதம் ரூ.1262
ஆண்டுக்கு அதிக அகவிலைப்படி – ரூ.15,144
CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்!
இதனால் அகவிலைப்படி 4% அதிகரித்தல் ஆண்டிற்கு சம்பளம் ரூ.15,000 க்கு மேல் அதிகரிக்கும். அதே அதிகபட்ச அடிப்படை ஊதியத்தில் உயர்த்தப்பட்ட டிஏவை கணக்கிட்டால், 38 சதவீதம் டிஏவின் இறுதியில் ஊழியர்களுக்கு மாதம் ரூ.21,622 கிடைக்கும். அதாவது ஆண்டுக்கு ரூ.2.6 லட்சம் வரை டிஏ பெறுவார்கள். இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் அதிக பலன்களை பெறுவார்கள்.