தமிழகத்தில் ரேஷன் கார்டு பயன்படுத்துவோருக்கான சூப்பர் வாய்ப்பு – தகவல் வெளியீடு!
இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலம் பல கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு சரியான முறையில் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்று தெரிந்து கொள்ள மாதந்தோறும் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
ரேஷன் கடைகள்:
இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஏழை மக்கள் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் உணவு பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதற்காக அரசின் பிரத்யேகமான அடையாள அட்டையை வழங்கி உள்ளது. மேலும் மக்களின் வாழ்க்கை தரத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு வகையான கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கார்டினை மக்கள் அனைத்து அரசின் சேவைகளுக்கும் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இதை தவிர மத்திய,மாநில அரசின் பல சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய ரேஷன் கடைகளில் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவு பொருட்களை வாங்கி வருகின்றனர். இவற்றில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை தவிர அனைத்து தரப்பு மக்களும் இந்த திட்டத்தில் பயன்பெற்று வருவதால், ஏழை மக்களுக்கு பலன்கள் கிடைக்காமல் போவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இதன் காரணமாக அரசு சார்பாக இது குறித்து விசாரிக்க தனிப்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றது. இந்த நிலையில் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு ஏற்படும் குறைகள் குறித்து மாதந்தோறும் குறைதீர் முகாம்களை அரசு நடத்தி வருகிறது.
இந்தியாவிலேயே முதல் முறையாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி – WHO அறிவிப்பு!
தமிழகத்தில் மாதாந்திர பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீர்ப்பு முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் செப்.10ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற இருக்கிறது. மேலும் இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய அட்டை பதிப்பு போன்ற சேவைகள் நடைபெற உள்ளன. மேலும் ரேஷன் கடைகளில் ஏதேனும் முறைகேடுகள் இருப்பின் மக்கள் இந்த முகாம்களில் தெரிவிக்கலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்