அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 9 நாட்கள் விடுமுறை!
அரசு துறை ஊழியர்களுக்கு துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு ஒன்பது நாட்கள் விடுமுறையை திரிபுரா மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு விடுமுறை:
ஒவ்வொரு மாநில அரசுகளும் புதிய ஆண்டு பிறக்கும் முன்பாக, அந்த குறிப்பிட்ட வருடத்திற்கான விடுமுறை மற்றும் வேலை நாட்களை முன்னதாக அறிவித்து விடும். அதன்படி தான் அந்த ஆண்டு முழுவதும் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும். இதை தவிர அரசு ஊழியர்களுக்கு விடுமுறைகள் அளிக்கப்படாது. அரசின் அனைத்து திட்டங்களையும் செயலாக மாற்றும் அரசின் ஊழியர்கள் தான் அரசின் முதுகெலும்பாக உள்ளனர்.
இதனால், அரசுகள் தனது ஊழியர்களுக்காக பல சிறப்பு திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து அவர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில், திரிபுரா மாநில அரசு, தனது ஊழியர்களுக்கு துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு ஒன்பது நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளது. திரிபுரா அரசு ஊழியர்களுக்கான ஒன்பது நாள் விடுமுறை அக்டோபர் 2ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இனி ஸ்மார்ட் போன்களில் “இது” கட்டாயம்.. ஷாக்கான மொபைல் நிறுவனங்கள் – இந்திய அரசின் புதிய உத்தரவு!
Exams Daily Mobile App Download
திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா இது குறித்து, அரசு ஊழியர்களுக்கு, துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு முன்னதாக நான்கு நாட்கள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் ஊழியர்கள் இதனால் மகிழ்ச்சி அடையவில்லை. எனவே, விடுமுறை நாட்களை 9 நாட்களாக அறிவித்ததாக கூறினார். துர்கா பூஜை இந்திய கலாச்சாரத்தின் ஒரு பிரிக்க முடியாத பண்டிகையாக உருவெடுத்துள்ளது. பலதரப்பட்ட மக்கள் இந்த பண்டிகையை பாரம்பரியமாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்