தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ் – அமைச்சர் தகவல்!
தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் விரைவில் தரமான அரிசி வழங்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
ரேஷன் கடை:
தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் அரிசி, பருப்பு, சர்க்கரை முதலியன ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பு மக்களுக்கு இது பெரிதும் பலன் அளிக்கிறது. ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கென தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரேஷன் பொருட்கள் மீது அதிகப்படியான கவனம் செலுத்தி வரும் நிலையில் அரிசி தரம் குறைவாக உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு – இன்றைய நிலவரம்!
காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.ராஜேஷ் குமார் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் குறித்து சட்டப்பேரவையில் பேசினார். அதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் அரிசியின் தரம் குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டினார். அவரது புகாருக்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அளித்துள்ள பதிலில், தமிழகத்தில் தற்போது 2,13,80,112 குடும்ப அட்டைகள் உள்ளது. இதில் முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைகளை வசதி படைத்த பலர் பெற்றிருக்கிறார்கள்.
ரேஷன் அரிசியை விற்பனை செய்வோர்க்கு பொருட்கள் விநியோகம் நிறுத்தம் – தமிழக அரசு!
முன்னுரிமை அல்லாத அட்டை வசதி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே இது குறித்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பேசிய அவர் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தரமான அரிசி வழங்குவதற்கு தமிழக அரசு உறுதி ஏற்று உள்ளதாகவும், இதற்காக ரேஷன் கடைகளில் அரிசி விநியோகம் செய்யும் ஆலைகள் இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் கலர் ஷேடிங் எனும் அரிசியை தரம் பிரிக்கும் இயந்திரத்தை நிறுவ உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தரமான அரிசி ரேஷன் கடைகளில் விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.