TN TRB 9000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த சூப்பர் அறிவிப்பு – அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் சட்ட பேரவையில் ஒவ்வொரு துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து பேசிய 34 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
நலத்திட்டங்கள்
தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் மார்ச் 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்றது. அத்துடன் 18ஆம் தேதி அன்று 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்த அறிக்கை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் தாக்கல் செய்தார். இதில் அரசின் நலத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதிஒதுக்கீடுகளும் இடம் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் முதல் கட்ட பட்ஜெட் விவாதம் கடந்த மாதம் நடைபெற்றது. இதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு ஏப்ரல் 8ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
அத்துடன் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பள்ளிக் கல்வித்துறை தொடர்பாக 34 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில், சென்னையில் 7 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்திலான பள்ளிகள் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். அத்துடன் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தின் இத்துறை ஊழியர்களுக்கு ரூ.500 சம்பள உயர்வு – அமைச்சர் ஹாப்பி நியூஸ்!
மேலும் மாணவர்களின் நலன் கருதி சிறப்பு பயிற்சி மற்றும் மனநலம் காக்க விழிப்புணர்வு வாரமும் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இது தொடர்பாக செய்தியாளரிடம் கூறியதாவது, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தமிழகத்தில் காலியாக உள்ள 15000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் இதில் முதற்கட்டமாக 9000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அறிவித்துள்ளார்.