ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – ரயில்வே துறையின் சூப்பரான அறிவிப்பு!
இந்திய பொது போக்குவரத்து துறைகளுள் ஒன்றான ரயில் போக்குவரத்து மிகவும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு ரத்து செய்து மற்றொருவருக்கு மாற்றுவதற்கான வசதியை ரயில்வே வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
பயணிகள் கவனத்திற்கு
இந்தியாவில் நாள்தோறும் ரயிலில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதனால் கொரோனா கால கட்டத்தில் பொதுமக்களின் வருகையை கட்டுப்படுத்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று ரயில்வே வாரியம் அறிவித்தது. தற்போது தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து முன்பதிவில்லா சேவை கட்டணத்தை மீண்டும் இந்த சேவை தொடங்கியுள்ளது. அதன்படி தற்போது ரயில் சேவைகள் வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளன.
ஜூன் 1 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவக்கம் – மாநில அரசு அறிவிப்பு!
இதனை தொடர்ந்து தற்போது ரயிலில் முன்பதிவு செய்து விட்டு பயணிக்க முடியாத சூழலில் டிக்கெட் ரத்து செய்து விட்டால் உங்களின் பணத்தை பெற முடியாது. ஆனால் தற்போது ரயிலில் முன்பதிவு செய்து விட்டு நீங்கள் பயணிக்க முடிவில்லையெனில் உங்கள் குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், சகோதரன், சகோதரி, மகன், மகள், கணவன் மற்றும் மனைவி உள்ளிட்டவர்கள் பெயரில் மாற்றி கொள்ளலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ஆனால் இப்படி மாற்றுவதற்கு ஒரு முறை மட்டுமே பயணிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனை மாற்ற தங்களின் டிக்கெட் நகல் எடுத்து அதனுடன் யாருக்கு இந்த டிக்கெட் மாற்றப்பட வேண்டுமோ அவர்களின் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை எடுத்து அருகில் உள்ள ரயில் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதில் நீங்கள் அரசு பணியாளராக இருப்பின் 24 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் திருமணத்திற்கோ மற்ற நிகழ்வுகளுக்கோ செல்லும் நபராக இருப்பின் 48 மணி நேரத்திற்கு முன்பாக நீங்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கோரிக்கை வைக்க வேண்டும். அதன்பின் வேறொரு ஒருவர் பெயரில் மாற்றி தரப்படும்.