TCS நிறுவன ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வேலை! 8% வரை சம்பள உயர்வு!
TCS நிறுவனம் தற்போது முதற்கட்டமாக 50,000 ஊழியர்களை மட்டும் மீண்டுமாக அலுவலகத்திற்கு அழைத்துள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் அனைத்து ஊழியர்களுக்கும் 8% வரை சம்பளம் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பள உயர்வு
இந்தியாவில் அதிக லாபம் ஈட்டும் முன்னணி தகவல்தொடர்பு நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இந்த மாதம் முதல் தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கப் போவதாக அறிவித்துள்ளது. இப்போது முதற்கட்டமாக உயர்மட்ட ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், அதுவும் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்றபடி, மீதமுள்ள 2 நாட்களில் அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில், நிறுவனங்கள் WFH மாதிரிக்கு மாற வேண்டியிருந்தது.
ExamsDaily Mobile App Download
அதில் ஊழியர்கள் தங்கள் வீடுகளில், வசதி மற்றும் பாதுகாப்பிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேலும், பல நிறுவனங்கள் WFH வசதியை இன்னும் வழங்கினாலும், அவற்றில் பல இப்போது படிப்படியாக ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து வருகின்றன. அந்த வகையில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனமான டிசிஎஸ், இந்த மாதம் முதல் தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கப்போவதாக அறிவித்துள்ளது. ஆனால் 50000 ஊழியர்கள் மட்டுமே வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திற்கு அழைக்கப்படுவார்கள்.
நாடு முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புதிய வசதிகள் அறிமுகம்!
அதாவது, இந்த மாதம் முதல் நிறுவனத்தின் மூத்த ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரத் தொடங்குவார்கள் என்று TCS நிறுவனத்தின் CEO மற்றும் MD ராஜேஷ் கோபிநாதன் உறுதிப்படுத்தினார். மேலும், இந்த ஆண்டின் நடுப்பகுதியில், அதாவது ஜூன்-ஜூலைக்குள் பெரும்பாலான ஊழியர்கள் (80%) அலுவலகத்திலிருந்து வேலை செய்யத் தொடங்குவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்கிடையில் டிசிஎஸ் 2021-22 நிதியாண்டின் கடைசி காலாண்டில் சுமார் 35,209 புதிய ஊழியர்களை நியமித்துள்ளது. இதேபோல், கடந்த நிதியாண்டில், 1,03,546 புதிய பணியாளர்கள் இந்த நிறுவனத்தில் வேலை பெற்றுள்ளனர். இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 5,92,195 ஆக உயர்ந்துள்ளது.