தமிழக மாணவர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி!
தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வி துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவர்கள் எதிர் காலத்தில் வேலைவாய்ப்பை பெறும் நோக்கில் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
திறன் பயிற்சி:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை சரி செய்யும் வகையில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து உயர்கல்வியிலும் மாற்றங்கள் வந்த வண்ணம் உள்ளது. அண்மையில் பொறியியல் படிப்பிற்கான பாடத்திட்டம் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டம் மாற உள்ளது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் ‘நான் முதல்வன்’ திட்ட மாநாட்டில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விரைவில் பாடத்திட்டங்கள் மாற்றப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார். தற்போது தமிழக அரசு மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும் வகையிலான பாடங்களை கற்பிக்க திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் பாடத்திட்டங்களையும் மாற்ற உள்ளது. அந்த வரிசையில் தற்போது தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை பெறும் வகையில் திறன் பயிற்சி அளிக்கப்படும் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்காக சுமார் ரூ.2,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தொழிற்பயிற்சி நிலையங்களில் உபகரணங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப கருவிகள் வாங்க தலா ரூ.27 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மாணவர்கள் நன்கு பயிற்சி பெற்று அவர்களுக்கு பிடித்தமான பணிக்கு செல்லும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்