தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – விரைவில் ஸ்மார்ட் கார்டு!
தமிழகத்தில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் கார்டு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் கார்டு:
தமிழகத்தில் பள்ளி கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். மேலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 20ம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் பணிகள் தற்போதே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2022 – 2023ம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது. அதனை தொடந்து மாணவர்களுக்கு பேருந்தில் பயணம் செய்ய ஸ்மார்ட் கார்டு வழங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம் என்று அமைச்சர் சிவ சங்கர் தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் கார்டு வழங்க டெண்டர் கோரப்பட்டு உள்ளதாகவும், விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக பயணம் செய்ய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி வாகனங்களில் கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி திறந்தவுடன் பேருந்துகளை முழுமையாக கண்காணிக்கப்படும் மற்றும் மண்டல போக்குவரத்து அதிகாரி மூலம் சோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – எந்த பிரச்சனை என்றாலும் உடனே புகார் கொடுக்கலாம்!
மேலும் பேருந்து பணியாளர்கள் வரும் நாட்களில் சரியாக பணிக்கு வர வேண்டும் இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். இனி வரும் காலங்களில் பேருந்து பயண டிக்கெட் முறைக்கு மாறாக இ- டிக்கெட் வழங்கும் முறை கொண்டு வரப்படும். இவை நடப்பாண்டில் இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தபின், G-pay, மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.