தமிழக வாகன ஓட்டிகளுக்கான சூப்பர் அறிவிப்பு – கூடுதலாக பார்க்கிங் வசதி!
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சென்னையில் கூடுதலாக பார்க்கிங் வசதியை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கான வேலைப்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
பார்க்கிங் வசதி
சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டபடியே இருந்து வருவதால் சென்னையில் உள்ள கார்ப்பரேஷன் தெருக்களில் கூடுதலாக பார்க்கிங் வசதியினை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்காக சென்னையில் 88 இடங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டுமே மொத்தமாக 12,000க்கும் மேற்பட்ட இடங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு தயாராக இருக்கும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை நகரில் உள்ள 200 வார்டுகளில் உள்ள வாகனங்களை நிறுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போதைக்கு சென்னை அடையாறில் சர்தார் படேல் சாலை, அம்பத்தூரில் தொலைப்பேட்டை சாலை, அண்ணா நகரில் உள்ள இரண்டாவது அவென்யூ, அசோக் நகரில் உள்ள மூன்றாவது அவென்யூ, பெசன்ட் நகரில் உள்ள ஆறாவது அவென்யூ, டிரிப்ளிகேனில் உள்ள வாலாஜா சாலை, ஜி.என், தி.நகரில் உள்ள செட்டி சாலை, கே.என்.கே. நுங்கம்பாக்கத்தில் உள்ள சாலை மற்றும் இரண்டாவது லைன் கடற்கரை சாலை என மொத்தமாக 44 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல் – மாணவர்களை ‘இதில்’ ஈடுபடுத்த கூடாது!
Exams Daily Mobile App Download
மேலும், சென்னையில் பார்க்கிங் லாட்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலமாக நாள் ஒன்றுக்கு மட்டுமே ₹80,000 முதல் ₹1.2 லட்சம் வரைக்கும் வசூல் கிடைப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், போக்குவரத்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வாகன நிறுத்துமிடங்களின் எண்ணிக்கையை மாநகராட்சி உயர்த்தும் எனவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு இடையே பார்க்கிங் பகுதிகளில் முறையாக பார்க்கிங் செய்யாத வாகன ஓட்டிகளிடம் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்