தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ஊதியத்துடன் கூடிய விடுப்பு!
தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வரும் நிலையில், தற்போது அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய வகையில் மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்செயல் விடுப்பு:
தமிழகத்தில் கொரோனா முதல் மற்றும் 2ம் அலைகள் ஏற்படுத்திய பாதிப்புகள் வரலாற்றை புரட்டிப் போடும் வகையில் இருந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யவும், மக்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கவும் அரசு தீர்விர நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து செயலாற்றி, நோய் தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் அரசு ஊழியர்கள் அனைவரும் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினரும் மிகவும் துடிப்புடன் பணியாற்றினார்கள்.
தமிழக அரசில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை – Diploma தேர்ச்சி போதும்…!
அரசு மற்றும் அரசின் ஊழியர்களின் மகத்தான பணியினால் தான் தமிழ்கத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் பல அலைகளாக தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த முடிகிறது. இதனால் அரசு தனது ஊழியர்களுக்கு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆர்வம் காட்டி வருகிறது. முன்னதாக அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டில் கொரோனா சிகிச்சையை சேர்த்தது. அதன்படி, ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். இதனுடன், கொரோனா பேரிடரின்போது மருத்துவச் செலவுகள் அதிகரித்ததையடுத்து, அரசு ஊழியர்களின் கொரோனா சிகிச்சை செலவை தமிழக அரசே ஏற்கும் என அறிவித்தது.
காரைக்குடியை சேர்ந்த ஒருவர் அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று காலத்தில் அளிக்கப்படும் விடுமுறைகளை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, அரசின் மனிதவள மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளர் (பொறுப்பு) அகிலா பதில் அளித்துள்ளார். அதன்படி, ஒரு அரசு ஊழியர் கொரோனா நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி அவர் சிகிச்சை பெற்ற நாட்கள், தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் முழுமைக்கும் மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் சிறப்பு தற்செயல் விடுமுறையாக அனுமதிக்கப்படும். மேலும் நோய் தொற்று அதிகம் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்தால் அதற்குரிய அறிவிப்பினை சமர்ப்பித்து, தடை செய்யப்பட்ட நாட்களை சிறப்பு தற்செயல் விடுப்பாக வழங்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.