1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மே 6 முதல் கோடை விடுமுறை!
ஆந்திரா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை மே 6 முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காண்போம்.
கோடை விடுமுறை
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் மே 6 முதல் ஜூலை 3 வரை கோடை விடுமுறை அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வி ஆணையர் எஸ்.சுரேஷ்குமார் தற்போது வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், ‘மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மே 6 முதல் ஜூலை 3 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. விடுமுறை முடிந்தவுடன் ஜூலை 4 முதல் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்கும்.
TN Job “FB Group” Join Now
இதற்கிடையில், 1 முதல் 9 வரையுள்ள வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வை மே 4க்குள் முடிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது கோடை விடுமுறைக்கு முன்னதாக பள்ளி மாணவர்களுக்கான மதிப்பீட்டை முடித்து ஆசிரியர்கள் முடிவுகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில்ஆங்கில மொழி மற்றும் சொற்களஞ்சியம் குறித்த மாணவர்களுக்கான அடிப்படைத் தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
7 ஆம் வகுப்பு முடித்தவரா ? TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க !
இது தவிர மே 6 முதல் ஜூலை 3 வரை கோடை விடுமுறை இருந்தபோதிலும், கல்வி நடவடிக்கைகளை தொடருவதற்காக மே 20 வரை பணிக்கு வர வேண்டிய ஆசிரியர்களுக்கு மே 20 வரை பள்ளிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பத்தாம் வகுப்பு தேர்வுகள், மதிப்பீடு மற்றும் பிற தகவல் பதிவேற்றம் ஆகியவற்றை கவனிப்பதற்காக மே 20 வரை பள்ளிகள் தொடரும் என்று ஆந்திர மாநில பள்ளிக்கல்வித்துறை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.