ரேஷன் கார்டு இருக்கா? அப்போ உங்களுக்கு ஜாக்பாட் தான் – மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!
மத்திய அரசின் அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பற்றிய முழு விவரங்களும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
சூப்பர் அறிவிப்பு:
மத்திய அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கும் மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெறுகின்றனர். கொரோனா கால கட்டத்தில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், தற்போது அந்தியோதயா அன்ன யோஜனா கீழ் பயன்பெற்று வரும் ரேஷன் குடும்ப தாரர்களுக்கு 21 கிலோ கோதுமை மற்றும் 14 கிலோ அரிசி மாதம் தோறும் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோதுமை 1 கிலோ ரூ.2 க்கும், அரிசி ரூ.3 க்கும் மானிய விலையில் விற்பனை செய்யப்படும், மத்திய அரசின் இந்த திட்டங்கள் மூலமாக அதிக அளவிலான ஏழை குடும்பங்கள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.