அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இனி வாரத்தில் 2 நாட்களுக்கு பொது விடுமுறை!
நாடு முழுவதும் தற்போது காணப்பட்டு வரும் பொருளாதார நெருக்கடியான சூழலை கருத்தில் கொண்டு வரும் மே 15 முதல், ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் மூடப்படும் என்று நேபாள அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொது விடுமுறை
நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள நேபாளத்தின் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இனி வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாள் வார விடுமுறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதாவது நாட்டில் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், கடந்த ஏப்ரல் 26ம் தேதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஞானேந்திர பகதூர் கார்க்கி கூறுகையில், ‘மே 15 முதல் இரண்டு நாள் பொது விடுமுறை முடிவை ஒரு சோதனையாக அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த முடிவின்படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் மூடப்படும். வாரத்தில் மற்ற ஐந்து நாட்களும் அரசு ஊழியர்களுக்கான வேலை நேரம் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை இருக்கும். இது முந்தைய காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் இருந்து மாற்றப்படும்’ என்று தெரிவித்துள்ளார். தற்போது நேபாளத்தில் எரிபொருள் இறக்குமதியானது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பில் அழுத்தத்தை உருவாக்கி வருகிறது. இது நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து மார்ச் நடுப்பகுதியில் ரூ171 பில்லியனாகக் குறைந்துள்ளது.
இது தவிர நேபாளத்தில் வாகனங்கள், மொபைல் போன்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், விளையாட்டு அட்டைகள் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கும், இறக்குமதி செய்வதற்கும் அரசு தடை விதித்துள்ளது. இதற்கிடையில் நேபாளத்தின் எரிபொருள் இறக்குமதி கட்டணம் சமீபத்தில் தினசரி ரூ.1 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது வெளிநாட்டு நாணய இருப்புகளை மோசமாக பாதிக்கிறது என்றும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான நேபாள ஆயில் கார்ப்பரேஷன் ஏற்கனவே நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் அரசு அறிவித்துள்ளது.