தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 5000 பரிசுத்தொகை – தமிழ் வளர்ச்சி துறையின் அசத்தல் அறிவிப்பு!

0
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 5000 பரிசுத்தொகை - தமிழ் வளர்ச்சி துறையின் அசத்தல் அறிவிப்பு!
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 5000 பரிசுத்தொகை - தமிழ் வளர்ச்சி துறையின் அசத்தல் அறிவிப்பு!
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 5000 பரிசுத்தொகை – தமிழ் வளர்ச்சி துறையின் அசத்தல் அறிவிப்பு!

தமிழக பள்ளிகளில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களின் வரலாற்றை மாணவர்கள் அறியும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அந்த வகையில் அடுத்த வாரம் தந்தை பெரியார் மற்றும் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சு போட்டி நடத்தப்படவுள்ளது.

பேச்சு போட்டி:

தமிழகத்தின் முக்கிய தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிகளில் மாணவர்களுக்கு தலைவரின் தியாகங்கள் குறித்து நினைவுபடுத்தும் வகையில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் கட்டுரைப்போட்டிகள் பேச்சு போட்டிகள், ஓவியம் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி போன்றவைகள் நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகைகளும் வழங்கப்பட்டது. இந்த போட்டிகள் மூலம் மாணவர்கள் தங்களது தனித்திறமைகளையும் வெளிக்கொணர்கின்றனர். கடந்த ஆண்டை போல நடப்பாண்டும் தமிழ் வளர்ச்சி துறை சார்பில், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்தப்படவுள்ளது. இப்போட்டியானது 15, 17 ஆகிய இரண்டு நாட்களும் சென்னையில் நடைபெறும் என்றும் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் தனித்தனியாக நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஐடி நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – ‘ மூன்லைட்டிங்’ முறைக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!

Exams Daily Mobile App Download

இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாவது பரிசாக ரூ.3,000, மூன்றாவது பரிசாக ரூ.2,000 வழங்கப்படும். மேலும் இப்போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு பரிசாக இரண்டு பேருக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறைக்கான மானியக் கோரிக்கையின் போது நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் கருத்துக்களையும் சமூகச் சிந்தனைகளையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க மாவட்ட அளவில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டாவது ஆண்டாக போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!