தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தளர்வுகள் – மாவட்ட ஆட்சியர்!

0
தமிழகத்தின் 'இந்த' மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தளர்வுகள் - மாவட்ட ஆட்சியர்!
தமிழகத்தின் 'இந்த' மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தளர்வுகள் - மாவட்ட ஆட்சியர்!
தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தளர்வுகள் – மாவட்ட ஆட்சியர்!

கொரோனா 2 ஆம் அலை தடுப்பு கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டிருந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் இருந்து கோவை மாவட்ட நிர்வாகம் தற்போது சில தளர்வுகளை அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தளர்வுகள் நாளை (செப்.26) முதல் அமலுக்கு வருகிறது.

தளர்வுகள் அமல்

தமிழகத்தில் தற்போது கொரோனா 2 ஆம் அலை தொற்றானது வீழ்ச்சியடைந்து வருகிறது. அந்த வகையில் ஒரு நாளைக்கு சுமார் 1,500க்கும் சற்று அதிகமாக கொரோனா தினசரி பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வந்தாலும், சில மாவட்டங்களில் மட்டும் புதிய பாதிப்புகள் அதிகமாக காணப்பட்டு வந்தது. அதனால் அரசின் வழிகாட்டுதல்கள் நெறிமுறைகளுடன் கோவை மாவட்டத்தில் மட்டும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகளில் இருந்து கோவை மாவட்ட நிர்வாகம் சில தளர்வுகளை அளித்து உத்தரவிட்டுள்ளது.

DC vs RR Live Score – டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு!

அதாவது கோவை மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் அதிகரித்ததை தொடர்ந்து நாளை (செப்டம்பர் 24) முதல் தளர்வுகள் அமல்படுத்தப்பட இருக்கிறது. இது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோவை மாநகரத்தில் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம். மேலும் மால்கள், சினிமாக்கள், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் இனி வாரந்தோறும் திறந்திருக்கலாம்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளை மூடும்படி உத்தரவிடப்பட்ட அனைத்து நிறுவனங்களும் வணிகத்தை மீண்டும் தொடங்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 12 மற்றும் 19 ஆகிய இரண்டு நாட்களிலும் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து, கோவை மாநகராட்சியில் சுமார் 80% க்கும் அதிகமானவர்களுக்கு குறைந்தபட்சமாக ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது 24.5 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதனுடன் மால்கள், திரையரங்குகள், மதுபானக் கடைகள், சந்தைகள், ஜவுளிக்கடைகள், நகைக் கடைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் குறைந்தபட்சம் முதல் தடுப்பூசியை பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் திருமண மண்டப உரிமையாளர்கள் திருமணம் நடைபெறும் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே உள்ளூர் வருவாய் அதிகாரிகளுக்கு நிகழ்வுக்குரிய விவரங்களை அனுப்ப வேண்டும். அத்தகைய நிகழ்வுகளில் அனைத்து கொரோனா பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டுதல்களும் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Byju’s, Goldman Sachs நிறுவனங்களில் 100% வேலைவாய்ப்புகள் – புதிய அறிவிப்பு!

குறிப்பாக கேரளாவில் இருந்து கோவை வரும் மாணவர்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என்றாலும், கேரளாவில் இருந்து வந்தவர்கள் 10 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. சந்தைகளைப் பொறுத்தவரை, 50% வர்த்தகர்கள் அல்லது விற்பனையாளர்களுடன் மட்டுமே செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொள்ளாச்சி கால்நடை சந்தை தமிழகத்திற்குள் உள்ளவர்களுக்கு மட்டுமே திறந்திருக்கும் என்று புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!