ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து – மாநில முதல்வர் அதிரடி உத்தரவு!!

0
ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து - மாநில முதல்வர் அதிரடி உத்தரவு!!
ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து - மாநில முதல்வர் அதிரடி உத்தரவு!!
ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து – மாநில முதல்வர் அதிரடி உத்தரவு!!

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமை பின்பற்றி வந்த முழு ஊரடங்கினை அம்மாநில முதல்வர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

பாதிப்பு எண்ணிக்கை

இந்தியாவில் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து கொரோனா 2ம் அலை பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்திற்கும் அதிகமாக பதிவானதால் அனைத்து மாநில அரசுகளும் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்தது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு பின்பற்றப்பட்டு வந்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA & DR) – நிதி அமைச்சகம் விளக்கம்!

தற்போது அங்கு வெறும் 48 பேருக்கு மட்டுமே கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். இதனால் அங்கு ஞாயிற்றுக்கிழமை பின்பற்றி வந்த முழு ஊரடங்கினை ரத்து செய்வதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். அவர் அதில் கூறிருப்பதாவது, “மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் கட்டுக்குள் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதே போல் தடுப்பூசி போடும் பணிகளும் துரிதமாக செயல்பட்டு வருகின்றது. கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமை பின்பற்றி வந்த ஊரடங்கு ரத்து செய்யப்பட உள்ளது” இவ்வாறாக பதிவிட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் தினசரி 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!