மாமாவிடம் மாட்டிக்கொண்ட கார்த்தி, சுந்தரி மீது வந்த கோவம் – “சுந்தரி” சீரியலில் அடுத்த திருப்பம் !
சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டு பல முன்னணி சீரியல்களுடன் போட்டி போட்ட சீரியல் தான் சுந்தரி. பல சுவாரசியமான கதையுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் தற்போது கார்த்திக் அவருடைய மாமாவிடம் மாட்டிக் கொள்ள போகிறார். அது குறித்து இந்த எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.
சுந்தரி சீரியல்:
சுந்தரி சீரியல் தமிழ் சின்னத்திரையில் உள்ள முன்னணி சீரியல்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலின் நாயகி சுந்தரி முதலில் கிராமத்து பெண்ணாக காட்டப்பட்ட நிலையில், தற்போது ஒரு பெரிய ஆபிஸ்ஸின் CEOவாக மாடல் லுக்கில் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அதனால் TRPயில் பெரிய மாற்றம் வந்துள்ளது. இந்நிலையில் சுந்தரியின் கணவர் தான் தன்னுடைய கணவர் கார்த்திக் என்ற உண்மை அனுவிற்கு தெரியாமல் இருக்கிறது.
ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!
கார்த்தியின் அக்கா கணவரான முருகன், கார்த்தியின் நெருங்கிய நண்பனான கிருஷ்ணாவிற்கு போன் செய்து ஊரில் நடக்க உள்ள திருவிழாவிற்கு சுந்தரி மற்றும் கார்த்திக்கை வர வைக்கிறார். பின் கார்த்திக்கு போன் செய்து திருவிழாவிற்கு அழைக்கிறார். சுந்தரியை கூப்பிட 10 நாட்கள் எப்படி ஆபிஸ் விட்டு வருவோம் என தெரியாமல் சுந்தரி கவலைப்படுகிறார். இதற்கிடையே கார்த்திக்கு ஏற்பட்ட விபத்து குறித்து கிருஷ்ணா சொல்ல அதனால் திருவிழாவிற்கு வரமாட்டான் கார்த்திக் என சொல்கிறார். ஆனால் அதை பற்றி சுந்தரி கவலைப்படவில்லை.
Exams Daily Mobile App Download
முதல் திருவிழாவிற்கு வந்தால் காப்பு கட்டி விடுவார்கள் என்பதால் கார்த்திக் திருவிழாவிற்கு போக மாட்டேன் என சொல்கிறார். அதன் பின் கார்த்திக்கு அவரது மாமா கால் செய்கிறார். அவர் கார்த்தி சென்னையில் தான் உள்ளார் என்பதால் திருவிழாவிற்கு முன்னாடியே வரும்படி கூறுகிறார். மாமா இப்படி பேசுவதற்கு சுந்தரி தான் காரணம் என நினைத்து சுந்தரியையும் போகவிடாமல் கார்த்திக் தடுக்க நினைக்கிறார். இதில் யார் வெற்றி பெறுவார் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.