சன் டிவி “சுந்தரி” சீரியல் கதாநாயகி கேப்ரில்லா வாழ்வில் முக்கிய தருணம் – குவியும் வாழ்த்துக்கள்!
சன் டிவி “சுந்தரி” சீரியல் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை கேப்ரில்லா வாழ்க்கையில் முக்கியமான தருணம் ஒன்று அரங்கேறியுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகை கேப்ரில்லா:
தமிழ் மக்களிடம் டிக்டாக் செயலி மூலம் அறிமுகமானவர் நடிகை கேப்ரில்லா. அவர் தன்னுடைய திறமையை காட்ட வேண்டும் என பல இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்து இருக்கிறார். ஆனால் அங்கே எல்லாம் அவரது நிறத்தை காரணம் காட்டி நிராகரித்து உள்ளனர். ஆனால் அவர் சோதனைகளை எல்லாம் சாதனையாக மாற்றி தற்போது முன்னணி சீரியல் கதாநாயகியாக ஜொலித்து வருகிறார். அவர் இதற்கு முன்னதாக விஜய் டிவி கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் தனது காமெடி திறமையை வெளிப்படுத்த மேடை ஏறினார்.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே சித்ராவின் வளைகாப்பு விழா – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!
ஆனால் அதில் வெற்றி கிடைக்காத நிலையில் தொடர்ந்து டிக்டாக்கில் கருத்து சொல்லும் வீடியோவை பதிவிட்டு பிரபலமானார். அவருக்கு பல வாய்ப்புகள் கிடைக்காமல் போக காரணமாக இருந்த நிறமே தற்போது சன் டிவியில் சுந்தரி சீரியலில் நடிக்க காரணமாக அமைந்தது. சுந்தரி என்ற பெண்ணின் சுயமரியாதை கதை தான் இந்த சீரியலின் மையக்கருத்து. இவர் இதற்கு முன்னதாக நயன்தாராவின் ஐரா படத்தில் நடித்து இருக்கிறார்.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் – பரீனா வெளியிட்ட பதிவு!
சுந்தரி சீரியல் பல முன்னணி சீரியல்களை பின்னுக்கு தள்ளி TRPயில் முதலிடம் பிடித்து இருக்கிறது. அதெற்கெல்லாம் முக்கிய காரணமாக கதை மற்றும் கேப்ரில்லாவின் நடிப்பு இருக்கிறது. இந்நிலையில் கேப்ரில்லா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அவரது இன்ஸ்டா பக்கத்தை ஆஸ்கார் புகழ் ஏ.ஆர் ரகுமான் follow செய்து வருகிறார். அது குறித்து அவர் கூறுகையில், இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம் சார்.. இப்படி ஒரு பெருமை எனக்கா” என ஆச்சரியத்துடனும் வியப்புடனும் குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர் ரகுமான்னை பலர் இன்ஸ்டாவில் follow செய்யும் நிலையில் அவர் கேப்ரில்லாவை follow செய்வது என்பது மிகப்பெரிய விஷயம். அதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.