பெண் குழந்தைக்கு தாயான சன் டிவியின் டாப் சீரியல் வில்லி – ரசிகர்கள் வாழ்த்து!!
சன் டிவியில் 1000 எபிசோடுகளை கடந்தும் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் “ரோஜா” சீரியலின் வில்லி விஜே அக்ஷயா தற்போது பெண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார்.
தாயான பிரபலம்:
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் இருந்தாலும் சன் டிவி சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் சன் டிவியில் டாப் சீரியலான “ரோஜா” சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் வில்லியாக நடிகை ஷாமிலி நடித்து வந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு விலகினார். அதன் பின் விஜே அக்ஷயா, அணு கதாபாத்திரத்தில் வில்லியாக களமிறங்கினார்.
Follow our Twitter Page for More Latest News Updates
தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் கொடூரமான வில்லியாக ரோஜா சீரியலில் நடித்து வரும் அவர், நிஜத்தில் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் அவர் சீரியலில் தொடர்ந்து அணுவாக நடித்து வருகிறார். தற்போது நிறைமாதமாக இருந்த நிலையில் அவருடைய காட்சிகள் காட்டப்படாமல் இருந்தது. இந்நிலையில் அவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.
பாதியிலேயே விட்டு சென்ற கணவர்.. எதிர்நீச்சல் சீரியல் நாயகி நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு கஷ்டமா!
Exams Daily Mobile App Download
அது குறித்து அவர் எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் அவருடைய நண்பர்கள் இது குறித்து பதிவிட்டுள்ளனர். அதை விஜே அக்ஷயா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார். மேலும் அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது ரோஜா சீரியல் கிளைமேக்ஸ் காட்சியை நெருங்கி விட்ட நிலையில், இந்த மகிழ்ச்சியான செய்தியை கேட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.