சன் டிவி சீரியல் நடிகைகாக கதையில் செய்யப்பட்ட மாற்றம் – வெளியான உறுதி தகவல்!

0
சன் டிவி சீரியல் நடிகைகாக கதையில் செய்யப்பட்ட மாற்றம் - வெளியான உறுதி தகவல்!
சன் டிவி சீரியல் நடிகைகாக கதையில் செய்யப்பட்ட மாற்றம் - வெளியான உறுதி தகவல்!
சன் டிவி சீரியல் நடிகைகாக கதையில் செய்யப்பட்ட மாற்றம் – வெளியான உறுதி தகவல்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர், தற்போது நிஜத்தில் கர்ப்பமாக இருக்கிறார். அதனால் சீரியல் கதையில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

செவ்வந்தி சீரியல்:

சன் டிவியில் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் தற்போது விறுவிறுப்பிற்கு குறைவு இல்லாமல் கதை சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடிகை திவ்யா ஸ்ரீதர் நடித்து வருகிறார். திவ்யா ஸ்ரீதர் தற்போது நிஜத்தில் கர்ப்பமாக இருக்கிறார். அவருடைய கணவர் அர்னவ் மூலமாக அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனை ஏற்பட்டது. போலீஸ் கேஸ் என சென்ற அவர் தற்போது அதில் இருந்து மீண்டும் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் நடிகை திவ்யாவிற்கு சீரியல் குழுவினர் வளைகாப்பு நடத்தி சப்ரைஸ் செய்தனர். அது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. அவருக்கு தற்போது 7 மாதங்கள் ஆன நிலையில் வயிறு நன்றாக தெரிய தொடங்கி இருக்கிறது. அதனால் அவர் எப்படி சீரியலில் தொடர்ந்து நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் திவ்யா ஸ்ரீதருக்காக தற்போது சீரியல் குழுவினர் அதிரடி மாற்றம் ஒன்றை கதையில் செய்துள்ளனர்.

அதிகரிக்கும் பறவை காய்ச்சல் – 3 லட்சம் கோழிகளை அளிக்க அரசு திட்டம்!

Exams Daily Mobile App Download

அதாவது அவர் சீரியலிலும் கர்ப்பமாக இருப்பது போல கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி அதனை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதனால் இனி செவ்வந்தி சீரியலில் திவ்யா ஸ்ரீதர் தொடர்ந்து நடிப்பார் என்பது உறுதியாகி இருக்கிறது. ஒரு கதாநாயகிக்காக சீரியல் கதையில் இவ்வளவு பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் சீரியல் குழுவிற்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!