பிரபல சன் டிவி சீரியலை விட்டு விலகிய கதாநாயகன்.. மாற்றப்பட்ட முழு கதை – வெளியான அப்டேட்!
சன் டிவியில் ப்ரைம் டைம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “செவ்வந்தி”. இந்நிலையில் இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் ராகவ் நடித்து வரும் நிலையில், அவர் சீரியலை விட்டு விலகி இருப்பதாக செய்திகள் வெளியானது. அது குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
செவ்வந்தி சீரியல்:
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பல புதுமையான கதையுடன் இருப்பதால் ஏகப்பட்ட ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில் சன் டிவியில் ப்ரைம் டைம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “செவ்வந்தி” சீரியல். இந்த சீரியலில் கதாநாயகியாக நடிகை திவ்யா ஸ்ரீதர் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் அர்னவ் உடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல சர்ச்சைகள் வந்த வண்ணம் இருக்கிறது.
Exams Daily Mobile App Download
சீரியலில் அவருக்கு ஜோடியாக நடிகர் ராகவ் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது ராகவ் சீரியலை விட்டு விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஆனால் அவர் சீரியலை விட்டு விலகவில்லை எனவும், அவர் கதாபாத்திரம் சீரியலில் இறப்பது போல காட்டப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சன் டிவி “தாலாட்டு” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சர்ச்சை நடிகர் – வெளியான புகைப்படம்
Follow our Instagram for more Latest Updates
ஹீரோ இறந்துவிட்டால் சீரியலில் எப்படி எல்லாம் கதை கொண்டு செல்லப்படும் என ரசிகர்கள் சந்தேகத்துடன் இருந்து வந்த நிலையில், இனி நடிகர் நித்தின் தான் ஹீரோவாக செவ்வந்தி சீரியலில் நடிப்பார் எனவும், திவ்யாவும் நித்தின் திருமணம் செய்து கொண்டு அதற்கு பின் தான் உண்மையான கதை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கதையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.