சன் டிவியில் பிரபல சீரியல்கள் ஒளிபரப்பாகும் நேரம் மாற்றம் – புதிய சீரியல் அறிமுகம் எதிரொலி!
தமிழ் சின்னத்திரையில் முன்னோடியாக இருக்கும் சன் தொலைக்காட்சியில் காலை முதல் மாலை வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் புதிதாக ஒரு சீரியல் அறிமுகம் செய்யப்பட இருப்பதால் சன் டிவி சீரியல்களின் நேர மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சன் டிவி சீரியல்கள்:
தற்போது உள்ள சூழ்நிலையில் சினிமாவை விட சின்னத்திரை சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. அதற்கு காரணம் மக்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு பல தொலைக்காட்சிகள் காலை முதல் மாலை வரை ஏகப்பட்ட சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. தமிழ் சீரியல்களுக்கு முன்னோடியாக அந்த காலம் முதல் சன் டிவி தான் பல சீரியல்களை அறிமுகம் செய்துள்ளது. சித்தி, திருமதி செல்வம், தெய்வமகள் என பல புகழ் பெற்ற சீரியல்கள் சன் தொலைக்காட்சியில் வெளிவந்துள்ளன.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” அண்ணி தனத்தின் மாடர்ன் அவதாரம் – ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் தற்போது உள்ள காலத்திற்கு ஏற்றார் போல பல சீரியல்களும் காதல் காட்சிகளுடன் இளைஞர்களை கவரும் வண்ணம் ஒளிபரப்பாகி வருகிறது. ரோஜா, வானத்தை போல, கண்ணான கண்ணே, சித்தி 2 சீரியல்கள் என TRPயில் போட்டி போடும் பல சீரியல்கள் உள்ளன. மேலும் அந்த சீரியல்கள் வயதானவர்கள் தான் சீரியல் பார்க்க வேண்டும் என்ற நிலைமையை மாற்றி புதிய பரிமாணத்தில் கதைக்களம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது சன் தொலைக்காட்சியில் புதிய சீரியல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் நாமினேட் செய்யப்படாத ஒரே ஒரு போட்டியாளர் – ரசிகர்கள் வாழ்த்து!
அருவி என பெயர் வைக்கப்பட்ட அந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சன் டிவி சீரியல்களின் நேர மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அருவி – 2.30 மணி, தாலாட்டு- 3 மணி, வானத்தை போல – மாலை 7.30 முதல் 8.30 வரை (ஸ்பெஷல் ஷோ), பூவே உனக்காக – இரவு 10 மணி, சித்தி 2 – 10.30 மணி ஆகிய நேரங்களில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற சீரியல்கள் எந்த மாற்றமும் இல்லாமல் ஒளிபரப்பாகும் என கூறப்பட்டு உள்ளது.