சன் டிவி ரோஜா சீரியலுக்கு மீண்டும் திரும்பும் சிபு சூர்யன்? வைரலாகும் பதிவு! ரசிகர்கள் உற்சாகம்!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ‘ரோஜா’ சீரியல் பலரது கவனத்தை ஈர்த்த முக்கியமான தொடர்களில் ஒன்றாகும். இந்த சீரியல் ஹீரோ சிபு சீரியலை விட்டு விலகுவதாக இணையத்தில் பதிவு ஒன்றை ஷேர் செய்திருந்தார். இந்நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் அளவுக்கு மற்றொரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ரோஜா சீரியலில் மீண்டும் அர்ஜீனாக சிபு:
கடந்த 2018 ஆம் ஆண்டு சன் டிவியில் ரோஜா சீரியல் தொடங்கப்பட்டது. ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. மேலும், ரோஜா சீரியல் தற்போது ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது தமிழ் டிவி சீரியல்களில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தில் சீரியல் ரோஜா உள்ளது. இதில் ஹீரோவாக நடிகர் சிபு சூர்யனும், ஹீரோயினாக பிரியங்காவும் நடிக்கிறார்கள். மேலும், இந்த சீரியலில் கணவன், மனைவியாக நடித்து வரும் சிபு சூர்யன், பிரியங்காவிற்கு தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
தமிழக மக்களுக்கு தடுப்பூசி குறித்து சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல் – முக்கிய தகவல்!
இந்நிலையில், இந்த சீரியலில் இருந்து தொடர்ந்து நடிகர், நடிகைகள் விலகி வருகின்றனர். அதன்படி, முதலில் யசோதா கதாபாத்திரத்தில் நடித்தவர் விலகினார், தொடர்ந்து அஸ்வின் மற்றும் அனு கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் சீரியலை விட்டு விலகினார். இந்நிலையில் சீரியலின் நாயகனாக நடிக்கும் சிபு சூர்யன் சீரியலை விட்டு விலகி இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபு சூரியன் மூன்று தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் ஒன்று போட்டு இருந்தார். அதில் நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன். வரும் ஆகஸ்ட் வரை மட்டுமே நான் நடிப்பேன்.
தமிழக பல்கலைக்கழங்களில் புதிய மொழி பாடம் – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
குட்-பை சொல்வது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால், சில நேரங்களில் அது மிக அவசியமான ஒன்றாகிறது. அர்ஜுன் கதாபாத்திரம் எனக்கு எப்போதும் ஸ்பெஷல். உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஆசிர்வாதம் எனக்கு தேவை என்று பதிவிட்டு இருந்தார். இந்த செய்தி ரோஜா சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ரசிகர்கள் சிபு வை சீரியலை விட்டு விலக வேண்டாம் என இணையத்தில் தொடர்ந்து கமெண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில் இன்று புதிய பதிவு ஒன்றை இன்ஸ்டாவில் சிபு ஷேர் செய்துள்ளார். அதில், கடந்த சில நாட்களாக ரசிகர்கள் காட்டுகின்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி, கடவுளுக்கும் நன்றி. மேலும், ரோஜா சீரியலை விட்டு விலகுவதாக நான் எடுத்த முடிவை மாத்திக்க போறேன், இனி உங்க அர்ஜுனாகவே சீரியலில் தொடருவேன் என்று கூறியிருந்தார். இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் அதிக சந்தோஷத்தில் உள்ளனர்.