சன் டிவி “ரோஜா” சீரியலில் யாரும் எதிர்பாராத என்ட்ரி! அடுத்து வர இருக்கும் ட்விஸ்ட் – சூப்பர் அப்டேட்!
சன் டிவியில் டாப் சீரியலில் ஒன்றான ரோஜா சீரியல் கிளைமேக்ஸ் காட்சிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரோஜா சீரியலில் அடுத்து வர இருக்கும் எபிசோடில் யாரும் எதிர்பாராத கதாபாத்திரம் ஒருவர் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
ரோஜா சீரியல்:
தமிழ் சின்னத்திரையில் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி தொடர்ந்து டாப் வரிசையில் இருக்கும் சன் டிவியின் ரோஜா சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்து ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் ரோஜா சீரியலில் தற்போது ரோஜா கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதன் பின் ரோஜாவுக்கு கூடிய விரைவில் பிரசவம் நடக்க இருக்கிறது. ரோஜாவிற்கு பிரசவ வலி வர, அதனால் அர்ஜுன் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் கயல் சீரியல் நாயகி சைத்ரா ரோஜா சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். கயல் நர்ஸ் என்பதால் அவருடைய அறிவுரையை கேட்டு அர்ஜுன் தான் ரோஜாவிற்கு பிரசவம் பார்க்க போகிறார்.
மனைவி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுதே ரச்சித்தாவின் கணவர் செய்த காரியம் – வைரல் பதிவு!
Follow our Instagram for more Latest Updates
இதுதான் ரோஜா சீரியலின் கிளைமாக்ஸ் காட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கதையின் படி ரோஜாவிற்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அப்டேட் வெளியான நிலையில் ரோஜா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சிகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.